தடுப்பூசி யுத்தம்: உற்பத்தியாளர்கள் மோதல்

தடுப்பூசி யுத்தம்: உற்பத்தியாளர்கள் மோதல்

2 mins read
d0ee5601-104b-4165-b807-1e3bd1b28c43
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா தடுப்­பூ­சி­களை தயா­ரிக்­கும் இரு நிறு­வ­னங்­க­ளுக்கு இடையே மோதல் வெடித்­துள்­ளது. பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தின் கோவேக்­சின் தடுப்­பூ­சியை அவ­ச­ர­கால பயன்­பாட்­டுக்­குப் பயன்­ப­டுத்த மத்­திய அரசு அண்­மை­யில் அனு­மதி அளித்­தது. இதற்­காக பின்பற்றப்பட்ட நடை­முறை குறித்து சில தரப்­பி­னர் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர். மேலும், துரித கதி­யில் கோவேக்­சின் தடுப்­பூசி அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­தா­க­வும் விமர்­ச­னம் எழுந்­துள்­ளது. இந்நிலையில் இது நியா­ய­மற்ற விமர்­ச­னம் என பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தின் தலை­வ­ரான டாக்­டர் கிருஷ்ணா கூறி­யுள்­ளார். தங்­கள் நிறு­வ­னம் 200 விழுக்­காடு அள­வுக்கு மிக நேர்­மை­யான முறை­யில் தடுப்­பூ­சிப் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­ட­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

முன்­ன­தாக, உல­க­ள­வில் ஃபைசர், மொடர்னா, ஆக்ஸ்­ஃபர்ட்-ஆஸ்ட்ராஸெனிக்கா தடுப்­பூ­சி­கள் மட்­டுமே செயல்­திறனை நிரூ­பித்­துள்ள தடுப்­பூ­சி­கள் என்று இந்­திய சீரம் நிறு­வ­னத்­தின் தலை­மைச் செயல் அதி­கா­ரி­யான ஆதார் பூன­வாலா ஒரு பேட்­டி­யில் தெரி­வித்­தி­ருந்­தார். மற்ற தடுப்­பூ­சி­கள் பாது­காப்­பான தண்­ணீ­ரைப் போன்­றவை என்­றும் விமர்­சித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், சீரம் நிறு­வ­னத்தை நேர­டி­யா­கக் குறிப்­பி­டா­மல் பதி­லடி கொடுத்­துள்­ளார் டாக்­டர் கிருஷ்ணா.

"சில நிறு­வ­னங்­கள் எங்­க­ளு­டைய தடுப்­பூ­சியை தண்­ணீ­ரைப் போன்­றது என்று குறிப்­பிட்­டுள்­ள­ன. அதை திட்­ட­வட்­ட­மாக மறுக்­கி­றேன். அமெ­ரிக்­கா­வும் ஐரோப்­பிய நாடு­களும் ஆஸ்ட்ராஸெனிக்கா - ஆக்ஸ்­ஃபர்ட் தடுப்­பூசி பரி­சோ­தனை தொடர்­பாக இங்­கி­லாந்­தில் இருந்து அளிக்­கப்­பட்ட தர­வு­களை ஏற்க மறுத்­துள்­ளன. ஆனால் அது குறித்து யாரும் கேள்வி எழுப்­ப­வில்லை.

"எனவே இவ்விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்," என்று டாக்டர் கிருஷ்ணா மேலும் தெரிவித்துள்ளார். தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இடையேயான இந்த மறைமுக மோதல் புது விவாதங்களை எழுப்பியுள்ளது.