புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகளைத் தொடங்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகளைத் தொடங்க உச்ச நீதிமன்றம் அனுமதி

1 mins read
5c13feeb-3976-4efa-93e3-1b9dfee2399b
-

புது­டெல்லி: புதிய நாடா­ளு­மன்­ற கட்­டடத்துக்கான பணி­க­ளைத் தொடங்க உச்ச நீதி­மன்­றம் அனு­மதி அளித்து உத்­த­ர­விட்­டுள்­ளது. புதிய கட்­ட­டத்­துக்­கான திட்ட வடி­வ­மைப்­பின், அம­லாக்­கத்­தில் விதிமீறல்­கள் இருப்­ப­தாக அண்­மை­யில் புகார்­கள் எழுந்­தன. இது தொடர்­பாக உச்ச நீதி­மன்­றத்­தில் சில வழக்­கு­களும் தொடுக்­கப்­பட்­டன. அம்­ம­னுக்­களை விசா­ரித்த நீதி­மன்­றம் தற்­போது தீர்ப்பு அளித்­துள்­ளது. சில நிபந்­த­னை­க­ளு­டன் புதிய கட்­ட­டத்­துக்­கான கட்­டு­மா­னப் பணி­களை தொடங்­க­லாம் என மூன்று நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு தெரி­வித்­துள்­ளது. அப்­பணி­யின்­போது தூசி பர­வ­லைத் தடுக்க உரிய கரு­வி­களை பயன்­படுத்த வேண்­டும் என்­றும் நீதி­ப­தி­கள் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

முன்­ன­தாக, வழக்கு விசா­ர­ணை­யின் தொடக்­கத்­தில் புதுக் கட்­ட­டத்­துக்­கான திட்­டத்­துக்கு அடிக்­கல் நாட்­ட­லாம் என்று அனு­மதி வழங்­கிய உச்ச நீதி­மன்­றம், உட­ன­டி­யாக கட்­டு­மா­னத்­தைத் தொடங்­கக் கூடாது என்­றும் மரங்­களை வெட்­டக்­கூ­டாது என்­றும் கடந்த டிசம்­பர் 7ஆம் தேதி உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்து டிசம்­பர் 10ஆம் தேதி நாடா­ளு­மன்ற புதிய கட்­ட­டத்­துக்கு பிர­த­மர் நரேந்­திர மோடி அடிக்­கல் நாட்­டி­னார். இந்த நிலை­யில் நேற்று இறுதித்­தீர்ப்பு வெளி­யா­னது. மூன்று நீதி­பதி­கள் அடங்­கிய அமர்­வில் இரு­வர் நாடா­ளு­மன்ற புதிய கட்­ட­டத்­துக்கு ஆத­ர­வான தீர்ப்பை வழங்­கி­ய­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

டெல்­லி­யில் உள்ள நாடா­ளு­மன்றக் கட்­ட­டம் கட்­டப்­பட்டு 93 ஆண்­டு­கள் ஆகின்­றன.