பினாமி சொத்து வழக்கு: ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

பினாமி சொத்து வழக்கு: ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

1 mins read
954822e0-abd1-4cd4-b910-b4ae643b9cd0
-

புது­டெல்லி: பினாமி சொத்து வழக்கு தொடர்­பாக பிரி­யங்கா காந்­தி­யின் கண­வர் ராபர்ட் வதேரா­வி­டம் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­யது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்­நி­லை­யில், இது அர­சி­யல் பழி­வாங்­கும் நட­வ­டிக்கை என காங்­கி­ரஸ் கட்சி தெரி­வித்­துள்­ளது. உண்மை வெற்றி பெறும் என்று ராபர்ட் வதேரா கூறி­யுள்­ளார். பினாமி வழக்கு தொடர்­பாக விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­கு­மாறு ராபர்ட் வதேராவி­டம் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் பல­முறை கேட்ட போதும் கொரோனா விவ­கா­ரத்­தால் தம்­மால் விசா­ர­ணை­யில் இணைய முடி­ய­வில்லை என்று அவர் கூறி­ய­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

இதை­ய­டுத்து வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் அதி­ரடி நட­வ­டிக்­கை­யாக ராபர்ட் வதேராவின் வீட்­டுக்கே நேர­டி­யா­கச் சென்று அவ­ரது வாக்­கு­மூ­லத்­தைப் பெற்­ற­னர்.

லண்­ட­னில் ராபர்ட் வதேரா­வுக்கு சில சொத்­து­கள் இருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. கணக்­கில் காட்­டப்­ப­டாத இந்த சொத்­து­கள் குறித்து வரு­மான வரித்­துறை விசா­ரித்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கிறது.மேலும் லண்­ட­னில் 1.9 மில்­லி­யன் பவுண்ட் மதிப்­புள்ள சொத்து வாங்­கி­யது தொடர்­பில் சட்­ட­வி­ரோத பணப்­ப­ரி­மாற்­றம் நிகழ்ந்­துள்­ள­தாக சந்­தே­கிக்­கும் அம­லாக்­கத் துறை­யும் ராபர்ட் வதேராவை மையப்­ப­டுத்தி விசா­ரணை நடத்தி வரு­கிறது.