தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் பரவும் பறவைக் காய்ச்சல்; டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

2 mins read
5b2d62d9-7ddb-470e-943f-f2dd20cb61e4
எச்5என்8 கிருமிப் பரவல் இருப்பதை அடுத்து, கேரள மாநிலம், ஆலப்புழாவில் கவச உடை அணிந்தபடி வாத்துகளைக் கொல்லும் பணியில் சுகாதார ஊழியர்கள். படம்: ஏஎஃப்பி -

இந்­தி­யா­வில் ராஜஸ்­தான், மத்­தி­யப் பிர­தே­சம், இமாச்­ச­லப் பிர­தே­சம், கேரளா ஆகிய நான்கு மாநி­லங்­களில் பற­வைக் காய்ச்­சல் (எச்5என்8) பரவி வரு­வதை மத்­திய மீன்­வள, கால்­நடை வளர்ப்பு, பால்­வளத் துறை அமைச்சு உறுதிப்­படுத்தி­யுள்­ளது.

ராஜஸ்­தா­னி­லும் மத்­தி­யப் பிர­தே­சத்­தி­லும் காகங்­க­ளைப் பற­வைக் காய்ச்­சல் தாக்­கி­யுள்­ளது. இமாச்­சலப் பிர­தே­சத்­தில் வலசை வந்த, ஈரா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்ட பற­வை­கள் அந்­நோ­யால் மாண்­டு­விட்­டன.

கேர­ளா­வின் கோட்­ட­யம் மற்­றும் ஆலப்­புழா மாவட்­டங்­களில் ஏரா­ள­மான வாத்­துப் பண்­ணை­கள் உள்ள நிலை­யில், பற­வைக்­காய்ச்­ச­லால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வாத்­து­கள் இறந்­து­விட்­டன.

இதை­ய­டுத்து, தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­படி மாநில அர­சு­கள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளன.

அத்­து­டன், நிலை­மை­யைக் கண்­கா­ணிப்­ப­தற்­காக தலை­ந­கர் புது­டெல்­லி­யில் ஒரு கட்­டுப்­பாட்டு அறையை அமைத்­துள்ள அமைச்சு, பற­வைக் காய்ச்­ச­லைத் தடுக்­க­வும் கட்­டுப்­ப­டுத்­த­வும் எடுத்து வரும் நட­வ­டிக்­கை­கள் குறித்து மாநில அர­சு­கள் அன்­றா­டம் அந்­தக் கட்­டுப்­பாட்டு அறைக்­குத் தக­வல் தெரி­விக்­கும் எனக் கூறி­யது.

இத­னி­டையே, பற­வைக் காய்ச்­சல் பர­வலை மாநி­லப் பேரி­ட­ரா­கக் கேரள அரசு அறி­வித்­துள்­ளது.

அந்­நோய்த் தாக்­கு­தல் உள்ள கோட்­ட­யம், ஆலப்­புழா மாவட்­டங்­களில் 12,000 வாத்­து­கள் இறந்து­விட்­ட­தா­க­வும் கிட்­டத்­தட்ட 40,000 பற­வை­கள் கொல்­லப்­பட இருப்­ப­தா­க­வும் மாநில வன, கால்­நடை வளர்ப்பு, பால்­வ­ளத் துறை அமைச்­சர் கே.ராஜு தெரி­வித்­தார்.

கோட்­ட­யம் மாவட்­டத்­தில் தடுப்பு நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கா­கத் தலா ஐந்து பேர் அடங்­கிய எட்­டுக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், கேர­ளா­வில் இருந்து கோழி, வாத்து, முட்டை போன்­ற­வற்­றைத் தமி­ழ­கத்­திற்­குக் கொண்டு வரு­வ­தைத் தடுக்­கும் வகை­யில் சாலை­களில் உள்ள அனைத்து சோத­னைச் சாவ­டி­களும் விழிப்­பு­டன் இருக்­கும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளன.

அதே­போல, தமி­ழ்நாட்டில் கோழிப் பண்­ணை­கள் அதி­க­மாக இருக்­கும் நாமக்­கல் மாவட்­டத்­தி­லும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­படி கால்­நடை வளர்ப்பு அமைச்சு அறி­வு­றுத்தி இருக்­கிறது.

ஒரு மில்­லி­யன் பற­வை­கள் இறப்பு

கடந்த பத்து நாள்­களில் அரி­யானா மாநி­லத்­தின் பஞ்­ச­குலா மாவட்­டத்­தில் மட்­டும் ஒரு மில்­லி­யன் பற­வை­கள் இறந்­து­விட்­ட­தாக என்­டி­டிவி செய்தி தெரி­விக்­கிறது. ஆயி­னும், அதற்­குப் பற­வைக் காய்ச்­சல்­தான் கார­ணமா என்­பது இன்­னும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று என்­டி­டிவி செய்தி கூறு­கிறது.

மத்­தி­யப் பிர­தே­சத்­தின் மண்ட்­சோர், இந்­தூர், மால்வா ஆகிய பகு­தி­களில் பற­வைக் காய்ச்­சல் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளதை அடுத்து, அதன் தொடர்­பில் ஆலோ­சிக்க முதல்­வர் சிவ­ராஜ் சிங் சௌகான் நேற்று அவ­சர கூட்­டத்­தைக் கூட்­டி­னார்.

இந்­தூ­ரில் நூற்­றுக்­க­ணக்­கான காகங்­கள் மடிந்து கிடந்த பகு­தி­களில் வீடு வீடாக மருத்­து­வப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளும் பணி தொடங்­கப்­பட்­டுள்­ளது. அம்மாநி­லத்­தில் இருந்து பிற மாநிலங்­க­ளுக்­குக் கோழி­க­ளைக் கொண்டு செல்­லத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய பூங்­காக்­களும் வன­விலங்­குச் சர­ணா­ல­யங்­களும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

குறிப்புச் சொற்கள்