கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக குமரி காற்றாலைகளில் அதிரடி சோதனை

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக குமரி காற்றாலைகளில் அதிரடி சோதனை

1 mins read
17d8c3e2-f3a6-4c00-b5f9-7c8803e36d4e
படம்: சாவ்பாவ் -

குமரி: கேரள தங்­கக் கடத்­தல் வழக்கு தொடர்­பில் தமி­ழ­கத்­தின் குமரி மாவட்­டத்­தில் உள்ள காற்­றா­லை­க­ளி­லும் ஒரு சொகுசு பங்­க­ளா­வி­லும் தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் அதி­ரடி சோதனை மேற்­கொண்­ட­னர்.

இந்­தக் கடத்­தல் வழக்­கில் சிக்­கி­யுள்ள ஐக்­கிய அரபு சிற்­ற­ரசு தூத­ர­கத்­தின் முன்­னாள் ஊழி­யர் ஸ்வப்னா சுரேஷ் சிறை­யில் உள்­ளார். கேரள மாநில மூத்த ஐஏ­எஸ் அதி­கா­ரி­யான சிவ­சங்­க­ரும் விசா­ரணை வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில் இவர்­கள் இரு­வ­ரும் காற்­றா­லை­களில் முத­லீடு செய்­தி­ருப்­ப­தா­கக் கிடைத்த தக­வலை அடுத்தே தேசிய புல­னாய்வு முகமை சில இடங்­களில் சோதனை நடத்­தி­யுள்­ளது.

இந்த காற்­றா­லை­கள் சிவ­சங்­கர், ஸ்வப்னா ஆகிய இரு­வ­ரில் யாருக்கு சொந்­த­மா­னவை என்­பது தெரி­ய­வில்லை என்­றும், பினாமி பெய­ரில் வாங்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்­றும் அதி­கா­ரி­கள் கரு­து­வ­தாக ஊட­கச்­செய்தி தெரி­விக்­கிறது.

சோதனை நட­வ­டிக்­கை­யின் போது சில முக்­கிய ஆவ­ணங்­களை அதி­கா­ரி­கள் கைப்­பற்றி இருப்­ப­தா­க­வும் அந்­தச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.