இலங்கை தமிழர் கட்சிகளுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

இலங்கை தமிழர் கட்சிகளுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

2 mins read
62211ddd-31a0-4fed-a6f9-f03fe51d3038
இலங்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். படம்: டுவிட்டர்/ஜெய்சங்கர். -

இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று தமிழர் கட்சித் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் இல்லத்தில் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய முக்கிய தமிழர் கட்சிகளுடனும் அரசாங்கத்தை பிரதிநிதிக்கும் டக்ளஸ் தேவானந்தா, எஸ். வியா ழேந்திரன் ஆகியோருடனும் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாக பிபிசி தமிழ் குறிப்பிட்டது.

இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­களை பிர­தி­நி­திக்­கும் இலங்கை தொழி­லா­ளர் காங்­கி­ரசின் பிரதி நிதி­க­ளையும் திரு ஜெய்­சங்­கர் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.

இலங்கை தொழி­லா­ளர் காங்­கி­ர­சின் பொதுச் செய­லா­ள­ரான ஜீவன் தொண்­ட­மான், இந்­திய வம்­சா­வ­ளித் தமிழ் மக்­கள் எதிர்­நோக்­கி­யுள்ள குறை­பா­டு­கள் தொடர்­பில் இந்­திய அமைச்­ச­ரி­டம் பேசி­ய­தா­கக் கூறி­னார்.

மலை­யக மக்­க­ளுக்­கான அனைத்து உத­வி­க­ளை­யும் செய்ய இந்­திய அர­சாங்­கம் தயா­ரா­க­வுள்­ள­தாக இந்­திய வெளி­யு­ற­வு அமைச்­சர் தெரி­வித்­தார் என்று ஜீவன் தொண்­ட­மான் கூறி­னார்.

இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஒரு­வர், மிக நீண்ட நாட்­க­ளுக்குப் பிறகு அனைத்து தமிழ் கட்­சி­க­ளு­ட­னும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருப்­பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யின் தலை­வ­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான மனோ கணே­சன் வெளியிட்­டுள்ள அறிக்கையில் அர­சி­ய­ல­மைப்­பின் 13ஆவது திருத்­தம் மற்­றும் மாகாண சபை தொடர்­பி­லான இந்­தி­யா­வின் நிலைப்­பாடு வர­வேற்­கத்­தக்­கது என்று குறிப் பிட்டுள்ளார்.

"இலங்­கை­யில் வெகு விரை­வில் இன­வா­தம் இல்­லாத இலங்­கையை கூட்­டணி உரு­வாக்­கும் என இந்­திய வெளி­யு­றவு அமைச்­ச­ரி­டம் உறு­தி­ய­ளித்­தோம்," என்­றார்.

இரா­மேஸ்­வ­ரம் - மன்­னார் - தூத்­துக்­குடி - கொழும்பு ஆகிய நக­ரங்­க­ளுக்கு இடை­யி­லான கப்­பல் சேவையை பரி­சீ­லிக்க கோரிக்கை விடுத்­தோம் என்றும் மனோ கணே­சன் தெரி­வித்­துள்­ளார். முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் அர­சி­யல் ஆய்­வா­ள­ரு­மான மயில்­வா­க­னம் தில­க­ராஜா, பிபிசி தமி­ழி­டம் பேசி­ய­போது உள்­நாட்­டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள மாற்­றத்தை இந்­தியா முழு­மை­யாக உள்­வாங்­கி­ உள்­ள­தாக கூறினார்.

"அத்­து­டன், 13வது திருத்­தச் சட்­டம் தற்­போது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ள பின்­ன­ணி­யில், இலங்கை தமிழ் தரப்பு எவ்­வா­றான நிலைப்­பாட்டை கொண்­டுள்­ளது என்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்­கா­கவே இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் அனைத்து தரப்­பு­க­ளு­ட­னும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­க­லாம்," என்­றார் அவர்.

இதற்­கி­டையே தமி­ழர் கட்சி பிர­தி­நி­தி­க­ளை­யும் பிர­மு­கர்­க­ளை­யும் சந்­தித்­துப் பேசியது மகிழ்ச்­சி­அளிக்கிறது என்று டுவிட்­டர் பதி­வில் இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் திரு ஜெய்­சங்­கர் குறிப்­பிட்­டு உள்­ளார். முன்னதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயை அவர் சந்தித்துப் பேசினார்.