கழிவுநீரில் அமர்ந்து சமூக ஆர்வலர் போராட்டம்

கழிவுநீரில் அமர்ந்து சமூக ஆர்வலர் போராட்டம்

2 mins read
4ed56299-6929-4036-8041-496d52fea2a0
படம்: ஊடகம் -

குரோம்­பேட்­டை­யில் சாலை­யில் தேங்கி நிற்­கும் கழிவு நீரை அகற்­றும் வரை இங்­கி­ருந்து செல்­ல­மாட்­டேன் என்று கூறி மீனாட்சி சுந்­த­ரம் என்ற சமூக ஆர்­வ­லர் கழிவுநீரில் அமர்ந்து போராட்­டம் நடத்­தி­னார்.

செங்­கல்­பட்டு மாவட்­டம், பல்லா வரம் நக­ராட்­சிக்கு உட்­பட்ட புதுவை நகர்ப் பகு­தி­யில் வணிகர்­கள் பலர் கடை­கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதே பகு­தி­யைச் சேர்ந்த சமூக ஆர்­வ­லர் மீனாட்சி சுந்­த­ரம், நாளும் தீராத தலைவலியாக இருந்து வரும் இந்த கழிவுநீர் பிரச்­சினைகளுக்கு ஒரு தீர்வு காணக் கோரி கழி­வு­நீர் மத்­தி­யில் அமர்ந்து தர்ணா போராட்­டத்­தில் ஈடு­பட்­டார்.

இதை­ய­டுத்து, குரோம்­பேட்டை நகர காவல்­து­றை­யி­னர் மீனாட்சி சுந்­த­ரத்­தி­டம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர். அப்போது, நக­ராட்சி ஆணை­ ய­ரும் துப்­பு­ரவு அலு­வ­லர்­களும் அவ­ரது கோரிக்­கை­களை விரை­வில் நிறைவேற்­றித் தரு­வ­தாக உறுதி கூறி­யதைத் தொடர்ந்து மீனாட்சி சுந்­த­ரம் போராட்­டத்­தைக் கைவிட்­டார்.

இதுகுறித்து மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "இந்தப் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளன. மக்கள் அருகில் வசிக்கமுடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி அமைத்துள்ள கால்வாயில் இருந்து ெவளியாகும் கழிவுநீர் அருகிலுள்ள கடைகளுக்குள் செல்கிறது. அதேபோல் ஹோட்டல் களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இங்கு தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பலமுறை பல்லாவரம் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண் டும்," என வலியுறுத்தி உள்ளார்.

பல்லாவரம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிடக் ேகாரியும் சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக் கோரியும் கழிவுநீர் மத்தியில் தனி ஒருவராக அமர்ந்து போராட்டம் நடத்துகிறார் சமூக ஆர்வலர் மீனாட்சி. படம்: ஊடகம்