: ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவசமாக ஆடுகளை வழங்கும் திட்டத்ைத ஆங்காங்கே தமி ழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதுபோல், இத்திட்டத்தின் கீழ் ஏறக்குறைய 70 பயனாளிகளுக்கு ஆடுகளை பொறுப்பாளர்கள் வழங்கியபோது, தலா 2,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு ஆடுகளை வழங்கியுள்ளனர்.
இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருவ தைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ளது உசிலம்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்த பயனாளர்களுக்கு அரசுத் திட்டத்தின் கீழ் இலவசமாக ஆடுகள் வழங்க உள்ளதாகக் கூறி, கொன்னையூரில் உள்ள சந்தைக்கு வரும் படி பொறுப்பாளர்கள் அழைத்தனர்.
அதன்படி, ஆடுகளை அழைத் துச் செல்ல வந்த 70 பேரிடமும் ரூ.2,000 கொடுத்தால் மட்டுமே ஆடுகள் வழங்கப்படும் எனக் கூறி யுள்ளனர் பொறுப்பாளர்கள். இதைக் ேகட்டு அதிர்ந்த மக்கள், வேறு வழியின்றி பணத்தைக் கொடுத்து ஆடுகளை அழைத்துச் சென்றனர்.

