வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை; உச்சநீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் 48 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையில், போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முவைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அவற்றின் மீதான விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதிகள் குழுவை நியமிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!