டிராக்டர் பேரணி: காவல்துறை முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

டிராக்டர் பேரணி: காவல்துறை முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

2 mins read
079c9f4c-81ca-4895-8e8d-d29e3a4c61cf
டெல்லி அருகே அணிவகுத்து நிற்கும் டிராக்டர்கள். படம்: ஊடகம் -

குடி­ய­ரசு தினத்­தன்று டெல்­லி­யில் விவ­சா­யி­கள் நடத்த திட்­ட­மிட்­டுள்ள டிராக்­டர் பேர­ணிக்கு அனு­மதி அளிப்­பது குறித்து டெல்லி காவல்­து­றை­தான் முடிவு செய்ய வேண்­டும் என உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

புதிய வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த விவ­சா­யி­கள் டெல்­லி­யில் ஒன்­று­கூடி ஆர்ப்­பாட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

கடந்த ஒன்­றரை மாதங்­க­ளுக்­கும் மேலாக நீடித்து வரும் இந்­தப் போராட்­டத்­தின் அடுத்­த­கட்­ட­மாக எதிர்­வ­ரும் குடி­ய­ரசு தினத்­தன்று டெல்­லி­யில் டிராக்­டர் பேரணி நடத்த விவ­சாய சங்­கங்­கள் முடிவு செய்­துள்­ளன.

தற்போது பஞ்­சாப், ராஜஸ்­தான், ஹரி­யானா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் டெல்லி நோக்கி படை­யெ­டுத்து உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் டிராக்­டர் பேர­ணிக்குத் தடை விதிக்­கக் கோரி டெல்லி காவல்­துறை சார்­பில் உச்ச நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­யப்­பட்­டது. இம்­மனு மீதான விசா­ரணை நேற்று நடை­பெற்­றது.

இரு­த­ரப்பு வாதங்­க­ளை­யும் செவி­ம­டுத்த உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள், டிராக்­டர் பேர­ணியை அனு­ம­திப்­பது குறித்து டெல்லி போலி­சார்தான் முடிவு செய்ய வேண்­டும் என்று தெரி­வித்­த­னர்.

மேலும் பேர­ணி­யில் பங்­கேற்­ப­தற்­காக பல்­வேறு மாநி­லங்­களில் இருந்து வரக்­கூ­டிய விவ­சா­யி­களை டெல்­லிக்­குள் அனு­ம­திக்­க­லாமா என்­ப­தை­யும் டெல்லி போலி­சார் தான் முடிவு செய்ய வேண்­டும் என்று நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

"பேர­ணியை அனு­ம­திப்­ப­தாக இருந்­தால் எத்­தனை பேர் பங்­கேற்­க­லாம், என்ன மாதி­ரி­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட வேண்­டும் என்று முடி­வெ­டுப்­ப­தும் டெல்லி காவல்­துறை கையில்­தான் உள்­ளது.

"சட்­டம் ஒழுங்கு பாதிக்­கப்­ப­டும்­போது காவல்­துறை தனக்­குள்ள அதி­கா­ரத்தை எப்­படி பயன்­ப­டுத்த வேண்­டும் என்­பது குறித்து மத்­திய அர­சுக்கு நாங்­கள் சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை," என்று உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

டெல்லி காவல்­துறை மூலம் மத்­திய அரசு இந்த மனுவை தாக்­கல் செய்­தி­ருந்­தது. இதை தள்­ளு­படி செய்ய வேண்­டும் என விவ­சாய சங்­கங்­கள் சார்­பி­லும் மனுத்­தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இம்­ம­னுக்­களை உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி எஸ்.ஏ.போப்டே தலை­மை­யி­லான அமர்வு விசா­ரித்து மேற்­குறிப்­பிட்ட உத்­த­ர­வைப் பிறப்­பித்­தது. இதற்­கி­டையே டெல்­லி­யில் திட்­ட­மிட்­ட­படி டிராக்­டர் பேரணி நடத்­தப்­படும் என விவ­சா­யி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் விவ­சா­யி­க­ளின் வரு­வாயை இரட்­டிப்­பாக அதி­க­ரிப்­பதே பிர­த­மர் மோடி­யின் விருப்­பம் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா தெரி­வித்­துள்­ளார்.

விவ­சா­யி­க­ளின் நல­னில் மத்­திய அரசு மிகுந்த அக்­கறை கொண்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.