'ஒவ்வாமை இருப்பின் தடுப்பூசி கூடாது'

'ஒவ்வாமை இருப்பின் தடுப்பூசி கூடாது'

1 mins read
54904f82-8475-42fb-95e9-864b5a291e48
படம்: ராய்ட்டர்ஸ் -

கொரோனா தடுப்­பூ­சி­யில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மருந்­துப் பொருட்­க­ளால் ஒவ்­வாமை பாதிப்பு ஏற்­ப­டக்கூடி­ய­வர்­கள் அந்த ஊசி­யைப் போட்­டுக்­கொள்­ளக் கூடாது என புனே­யில் உள்ள இந்­திய சீரம் நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக நேற்று முன்தினம் வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், தடுப்­பூசி போட்­டுக் கொள்­ப­வர்­கள் தங்­க­ளுக்­குள்ள ஒவ்­வாமை பாதிப்பு குறித்து சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளி­டம் முன்­கூட்­டியே தெரி­விக்க வேண்­டும் என அந்­நி­று­வ­னம் அறி­வு­றுத்தி உள்­ளது.

"தடுப்­பூசி எடுத்­துக்­கொள்­வ­தற்கு முன்­பாக குறிப்­பிட்ட சில மருந்து, உணவு வகை­க­ளா­லும் வேறு தடுப்­பூ­சி­கள் மற்­றும் கொவி­ஷீல்ட் தடுப்­பூ­சி­யில் உள்ள மருந்­துப் பொருட்­க­ளா­லும் ஒரு­வ­ருக்கு ஏற்­கெ­னவே ஒவ்­வாமை ஏற்­பட்­டி­ருந்­தால் அது­கு­றித்து சுகா­தா­ரப் பணி­யா­ள­ரி­டம் கண்­டிப்­பாக விவ­ரம் தெரி­விக்க வேண்­டும்.

"மேலும் காய்ச்­சல், ரத்­தக் கோளாறு, நோய் எதிர்ப்­பு­சக்தி குறை­பாடு ஆகி­யவை இருந்­தா­லும் விவ­ரம் தெரி­விக்க வேண்­டும்," என்று இந்­திய சீரம் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

கர்ப்­பம் தரித்­துள்ள பெண்­களும் குழந்­தைக்குத் தாய்ப்­பா­லூட்­டும் பெண்­களும் தங்­க­ளின் தற்­போ­தைய நிலை குறித்து விவ­ரம் தெரி­விப்­பது அவ­சி­யம் என்று குறிப்­பிட்­டுள்ள அந்­நி­று­வ­னம், வேறு கொரோனா தடுப்­பூ­சியைப் போட்­டி­ருந்­தால் அது­கு­றித்­தும் சுகா­தா­ரப் பணி­யா­ள­ரி­டம் உரிய விவரங்களைத் தெரி­விக்க வேண்­டும் என அறிக்கையில் கேட்டுக்கொண்­டுள்­ளது.