உலகின் ஆகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’ வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் இது, தடுப்பூசி உற்பத்தியை பாதிக்க வில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசி தயாரிக்கும் இடத்தி லிருந்து சில நிமிட தொலைவில் உள்ள கட்டடங்களில் நேற்று பிற் பகல் தீ மூண்டு மற்ற இடங் களுக்கும் பரவியது.
பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.
இந்த தீ விபத்தில் ஐவர் மாண்டதாக நேற்று மாலை வெளியான தகவல்கள் தெரிவித்தன.
மின்சாரக் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
புனே நகரில் உள்ள இந்தத் தடுப்பூசி தொழிற்சாலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ராஸெனக்காவும் உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.