உண்மை நண்பன்: இந்தியாவைப் பாராட்டும் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனம்

உண்மை நண்பன்: இந்தியாவைப் பாராட்டும் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனம்

2 mins read
939c6ccf-bf60-4158-9747-1c5195d691dd
இமாச்சலப் பிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒருவர். படம்: தகவல் ஊடகம் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை எதிர்­பார்த்த வெற்­றி­யைத் தர­வில்லை என்று ஒரு தரப்­பி­னர் கூறி வரும் நிலை­யில் இந்­தி­யா­வின் செயல்­பாட்­டுக்கு அமெ­ரிக்­கா­வும் உலக சுகா­தார நிறு­வ­ன­மும் பாராட்டு தெரி­வித்­துள்­ளன.

கடந்த ஒரு வார கால­மாக இந்­தி­யா­வில் நாடு தழு­விய அள­வில் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது. இது­வரை 1.5 மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. எனி­னும் தடுப்­பூசி போடு­வ­தற்­கான அன்­றாட இலக்கை எட்ட முடி­ய­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

தின­மும் 300,000 பேருக்கு தடுப்­பூசி போடு­வதை இலக்­காக அறி­வித்­தி­ருந்­தது மத்­திய அரசு. ஆனால் கடந்த ஏழு தினங்­க­ளாக சரா­ச­ரி­யாக 200,000 பேர் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

தடுப்­பூசி போட்­டுக்கொள்­வ­தற்­கான வாய்ப்­புள்­ள­வர்­களில் மூன்­றில் ஒரு­வர் அதற்கு முன்­வ­ர­வில்லை எனத் தெரி­கிறது. தடுப்­பூசி குறித்த அச்­சம் பல­ரி­டம் காணப்­ப­டு­வ­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

எனினும் வரும் நாட்களில் வீண் அச்சங்கள் மறைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் முன்வருவார்கள் எனக் குறிப்பிட்டுள்ள மத்திய அரசு வட்டாரங்கள், இந்தியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் தரமானவை என மருத்துவ ரீதியில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றன.

இதற்­கி­டையே, இந்­தியா உலக சமு­தா­யத்­தின் உண்­மை­யான நண்­பன் என அமெ­ரிக்கா பாராட்டி உள்­ளது. தடுப்­பூ­சியை பல நாடு­க­ளுக்கு அனுப்பி வைத்து உல­க­ளா­விய அள­வில் இந்­தியா உதவி செய்து வரு­கிறது என்று அந்­நாட்­டின் தெற்கு மற்­றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான துறை தனது டுவிட்­டர் பக்­கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளது.

உலக சுகா­தா­ரத்­தில் இந்­தி­யா­வின் பங்­க­ளிப்­பைப் பாராட்­டு­வ­தா­க­வும் அமெ­ரிக்கா மேலும் தெரி­வித்­துள்­ளது.

பல நாடு­க­ளுக்கு கொரோனா தடுப்­பூசி மருந்­து­களை வழங்கி உதவி செய்து வரு­வ­தற்­காக இந்­தி­யா­வுக்­கும் பிர­த­மர் நரேந்­திர மோடிக்­கும் பாராட்­டுக்­க­ளைத் தெரி­வித்­துக்கொள்­வ­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.

"அனை­வ­ரும் ஒருங்­கி­ணைந்து உத­வு­வது, தக­வல்­க­ளைப் பரி­மா­றிக்கொள்­வ­தன் மூலம்­தான் கொரோனா கிரு­மித்­தொற்றை ஒழிக்க முடி­யும்," என அந்­நி­று­வ­னம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

பிரே­சில், பங்­ளா­தேஷ், பக்­ரைன், பூட்­டான், மாலத்­தீவு, இலங்கை உள்­ளிட்ட 13 நாடு­க­ளுக்கு இந்­தியா தடுப்­பூ­சி­களை ஏற்­று­மதி செய்து வரு­கிறது.