விழுப்புரம் மாவட்டம், தளவானூர் கிராமம், கடலூர் மாவட்டம், திரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடியே 35 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை 4 மாதங்களில் உடைந்து விழுந்தது.
இதையடுத்து, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தி.மு.க.வினர் விவசாயிகளுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், “விரைவில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும்,” என்றார்.