கொரோனாவுக்கு மத்தியிலும் களைகட்டியது குடியரசு தினம்

கொரோனாவுக்கு மத்தியிலும் களைகட்டியது குடியரசு தினம்

2 mins read
7706ba9c-40d7-4d79-83ec-1978be0db36e
அணிவகுப்பில் மயிலாட்டம் ஆடியபடி சென்ற நடனக்கலைஞர்கள். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவின் 72வது குடி­ய­ரசு தினம் நேற்று கொண்­டா­டப்­பட்­டது. கொரோனா விவ­கா­ரம் கார­ண­மாக சுமார் நான்­கா­யி­ரம் பார்­வை­யா­ளர்­கள் மட்­டுமே குடி­ய­ரசு தின நிகழ்ச்­சி­களை நேரில் காண அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

நாட்­டில் அர­சி­யல் அமைப்­புச் சட்­டம் அமல்­ப­டுத்­தப்­பட்­டதை நினை­வு­கூ­ரும் வகை­யில் குடி­ய­ரசு தினம் கொண்­டா­டப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில் 1966ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்­மு­றை­யாக வெளி­நாட்டு சிறப்பு விருந்­தி­னர்­கள் பங்­கேற்பின்றி இந்த ஆண்டு குடி­ய­ரசு தின அணி­வ­குப்பு நடை­பெற்­றது.

புது­டெல்­லி­யில் உள்ள ராஜ­பா­தை­யில் 8.5 கிலோ மீட்­டர் தூரத்­துக்கு இந்த அணி­வ­குப்பு நடத்­தப்­ப­டு­வது வழக்­கம். இம்­முறை அது 3.5 கிலோ மீட்­டர் தூரத்­துக்கு மட்­டுமே நடத்­தப்­பட்­டது.

முப்­ப­டை­க­ளின் அணி­வ­குப்பு மரி­யா­தையை ஏற்­றுக்­கொண்ட அதி­பர் ராம்­நாத் கோவிந்த் அந்­நி­கழ்­வில் உரை­யாற்­றி­னார். அணி­வ­குப்­பில் மாமல்­ல­பு­ரம் கடற்­கரை கோவிலை சித்­தி­ரிக்­கும் தமி­ழக அலங்­கார வாக­னம் இடம்­பெற்­றது.

நிகழ்­வில் பங்­கேற்ற மற்ற வாக­னங்­கள் பல்­வேறு மாநி­லங்­க­ளின் கலை, கலா­சா­ரத்தை வெளிக்­காட்­டும் வகை­யில் இருந்­தன. பல்­ல­வர்­க­ளின் பெரு­மை­யைப் பறை­சாற்­றும் மாமல்­ல­பு­ரம் கடற்­க­ரைக் கோயி­லின் மாதிரி அடங்­கிய வாக­னத்­து­டன் 'பாருக்­குள்ளே நல்ல நாடு எங்­கள் பார­த­நாடு' என்ற பாடல் ஒலிக்க நட­னக் கலை­ஞர்­கள் அதற்­கேற்ப நட­ன­மா­டி­னர். மேலும் மயி­லாட்­டம், ஒயி­லாட்­டம் உள்­ளிட்ட நட­னங்­களும் இடம்­பெற்­றன. அமர்­நாத் கோவில் அலங்­கா­ரத்­து­டன் பங்­கேற்ற வாக­னம் அனை­வ­ரது கவ­னத்­தை­யும் கவர்ந்­தது.

விழா­வில் 21 குண்­டு­கள் முழங்க தேசி­ய­கீ­தம் இசைக்­கப்­பட தேசி­யக்­கொ­டியை ஏற்றி வைத்து வணக்­கம் செலுத்­தி­னார் அதி­பர் ராம்­நாத் கோவிந்த். பின்­னர் உரை­யாற்­றிய அவர், என்ன விலை கொடுத்­தா­வது நாட்­டின் நலன்­கள் பாது­காக்­கப்­படும் என்­றார். இந்­தியா எப்­போ­தும் அமை­தி­யைத்­தான் விரும்­பு­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.