அனைத்துலக பயணிகள் விமானச் சேவைக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்தத் தடை ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது.
கொவிட்-19 தொற்று பரவலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த மே 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியது. சிறப்பு விமானங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு இப்போது இயக்கப்பட்டு வருகின்றன.