மக்களுக்கு நீதி: மகாராஷ்டிரா முதலிடம்; தமிழகம் 2வது இடம்

மக்களுக்கு நீதி: மகாராஷ்டிரா முதலிடம்; தமிழகம் 2வது இடம்

2 mins read
ebfdfa96-01d8-4513-bc60-cf4ef1bdb697
இந்தியாவில் பீகாரில்தான் பெண் போலிசார் அதிகம். மொத்த போலிஸ்காரர்களில் கால்வாசிப் பேர் பெண்கள். படம்: ஊடகம் -

இந்­தி­யா­வில் மக்­க­ளுக்கு நீதி கிடைப்­ப­தைப் பொறுத்த வரை­, மகா­ராஷ்­டி­ர­மும் தமிழ்­நா­டும் முறையே முத­லா­வது, இரண்­டா­வது இடத்­தில் இருக்­கின்­றன.

இதில் உத்­த­ரப்­ பி­ர­தே­சம் படு­மோ­ச­மான நிலை­யில் இருப்­ப­தாக 'இந்­திய நீதித்­துறை அறிக்கை 2020' தெரி­விக்­கிறது.

இந்­தி­யா­வில் பெரிய, நடுத்­தர அள­வுள்ள 18 மாநி­லங்­களில் போலிஸ், சிறைச்­சா­லைத் துறை, நீதித்­துறை, சட்ட உதவி போன்றவை எந்த அள­வுக்குச் செயல்­தி­றன் மிக்­க­வை­யாக இருக்­கின்­றன என்­பதை ஒப்­பிட்டு அந்த ஆய்வு பல தகவல்களை வெளி­யிட்டு உள்­ளது.

டாட்டா அறக்­கட்­டளை சார்­பில் நடத்­தப்­பட்ட அந்த ஆய்வு முடி­வு­களைப் பார்க்­கை­யில், நான்கு பிரிவு­க­ளி­லும் ஒட்­டு­மொத்­த­மாக மகா­ராஷ்­டிரா முத­லி­டத்­தைப் பெற்­றுள்­ளது. கடந்த ஆண்டு ஆய்­வில் மூன்­றா­வது இடத்­தில் இருந்த தமிழ்­நாடு, இந்த ஆண்டு 2வது இடத்­துக்கு முன்­னேறி இருக்­கிறது.

நீதித்­து­றையை மட்­டும் பார்த்­தால் நாட்­டி­லேயே முதல் மாநி­ல­மாக தமிழ்­நாடு திகழ்­கிறது.

நாட்­டி­லேயே பீகா­ரில்­தான் பெண் போலி­சார் அதி­கம் என்­றும் அந்த ஆய்வு தெரி­விக்­கிறது.

அந்த மாநி­லத்­தின் போலிஸ் படை­யில் போலி­சாக வேலை பார்ப்­போரில் சுமார் கால்­வா­சிப் பேர் மாதர்­.

இதில் இமாச்­ச­லப்­பி­ர­தே­சம் அடுத்த இடத்­தை­யும் தமிழ்­நாடு 3வது இடத்­தை­யும் பெறு­கின்­றன.

தமிழ்­நாட்­டில் போலி­சா­ரில் 18.5 விழுக்­காட்­டி­னர் பெண்­கள். ஆனால் பெண் போலிஸ் அதி­காரி­க­ளைப் பார்க்­கை­யில் தமிழ்­நா­டு­தான் முத­லி­டத்­தில் இருக்­கிறது. தமி­ழக போலிஸ் படை­யில் பணி­யாற்­றும் பெண்­களில் சுமார் 25 விழுக்­காட்­டி­னர் அதி­கா­ரி­களாக பணி­யாற்­று­கி­றார்­கள்.

நாடு முழு­வ­தும் பார்க்­கை­யில் மொத்­தத்­தில் சிறைச்­சா­லை­களில் இருப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை கூடி இருக்­கிறது. அவர்­களில் 69 விழுக்­காட்­டி­னர் இன்­ன­மும் விசா­ரணை முடி­யா­மல் தீர்ப்பை எதிர்­பார்த்து காத்து இருக்­கி­றார்­கள்.