தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

17 மாநிலங்களில் 36,000 போலி சான்றிதழ்கள் வழங்கிய பல்கலைக்கழகம்

1 mins read
086df06b-ecd9-4bc4-a6ab-cb1f15c95c9e
படம்: ஊடகம் -

தனி­யார் பல்­க­லைக்­க­ழ­கம் ஒன்று பட்­டப்­ப­டிப்­புக்­கான போலிச் சான்­றி­தழ்­களை ஆயி­ரக்­கணக்­கா­னோ­ருக்­குப் பணம் பெற்றுக்­ கொண்டு வழங்­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து மத்­திய அம­லாக்­கத்­துறை அப்­பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கோடிக்­க­ணக்­கான சொத்­து­களை முடக்கி வைத்­துள்­ளது.

இமாச்சல ­பி­ர­தேச மாநி­லம் சோலான் நக­ரில் அமைந்­துள்­ளது மானவ் பார்தி எனும் அத்­த­னி­யார் பல்­க­லைக்­க­ழ­கம். இதில் பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்­கள் பல்­வேறு பட்­டப்­ப­டிப்­பு­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

இப்­பல்­க­லைக்­க­ழ­கம் ஏரா­ள­மானோ­ருக்கு போலிச் சான்­றி­தழ்­கள் வழங்­கு­வ­தாக தொடர் புகார்­கள் எழுந்­தன. அவை குறித்து அம்மாநில போலி­சார் தீவிர விசாரணை மேற்­கொண்­ட­னர்.

அப்­போது திடுக்­கி­டும் தக­வல்­கள் தெரி­ய­வந்­தன. இதை­ய­டுத்து மத்­திய அம­லாக்­கப் பிரிவு, வரு­மான வரித்­துறை ஆகி­ய­வற்­றுக்­குத் தகவல் அளிக்­கப்­பட்­டது.

மேலும் இமாச்சல ­பி­ர­தேச நிதி புல­னாய்வுப் பிரி­வும் விசா­ர­ணை­யில் ஈடு­பட்­டது. இதில் 17 மாநிலங்­களைச் சேர்ந்த 36 ஆயி­ரம் பேருக்கு இப்­பல்­க­லைக்­க­ழ­கம் தர­கர்­கள் மூலம் போலிச் சான்­றி­தழ் அளித்­தி­ருப்­பது அம்­ப­ல­மா­னது.

இத­னால் கடும் அதிர்ச்சி அடைந்த இமாச்­ச­ல பிர­தேச போலி­சார் எட்டு பேரை அதி­ர­டி­யா­கக் கைது செய்­துள்­ள­னர்.

இத்­த­னி­யார் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு சுமார் 194 கோடி ரூபாய் மதிப்­பி­லான சொத்­து­கள் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இவற்றை மத்­திய அம­லாக்­கத்துறை முடக்கி வைத்­துள்­ளது.