உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பனிப்பாறை உடைந்ததில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 19 பேர் மாண்டனர். 200க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.
வெள்ளத்தால் அப்பகுதியில் உள்ள சுரங்கத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ளனர்.
அவர்களைத் தேடி மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இடத்துக்கு மருத்துவக் குழுக்களும் விரைந்தன.