டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தாதேவி பனிப்பாறை கடந்த வாரம் உடைந்தது. அதனைத் தொடர்ந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்த அனல், நீர்மின் நிலையங்கள் பெருத்த சேதம் அடைந்தன.
தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு சகதியாலும் இடிபாடுகளாலும் மூடிக்கொண்டது.
அதனுள்ளே வேலை செய்த 25 முதல் 30 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி நேற்று 8வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. ஏற்ெகனவே 38 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் எட்டு சடலங்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்து சுரங்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்தனர்.
இதனால் மாண்டோர் எண்ணிக்கை 46 ஆனது. இன்னும் 158 பேரைப் பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.
உயிரிழந்தோரில் 12 பேர் யார் என்று அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில் மற்றவர்களைப் பற்றிய விவர மும் தேடப்பட்டு வருகிறது.
சேறுகளை அகற்றி அவர்களை மீட்கும் பணியில் ராணுவம், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சேறுகளை அகற்றும் பணியும் துளையிடும் பணியும் ஒரேநேரத்தில் நடைபெற்று வருகின்றன.
சனிக்கிழமை இரண்டு, நேற்று மூன்று என உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் தேடுதல் பணி தீவிரப்
படுத்தப்பட்டுள்ளதாக சமோலி மாவட்ட மாஜிஸ்திரேட் ஸ்வாதி எஸ் பதோரியா தெரிவித்துள்ளார்.
இந்தத் தேடுதல் பணியில் யாரேனும் உயிருடன் மீட்கப் பட்டால் அவர்களுக்கு மருத் துவ உதவிகளை வழங்க ஹெலிகாப்டர்கள் தயார்நிலை யில் வைக்கப்பட்டு இருப்பதாக வும் அவர் கூறினார்.

