இரு விபத்துகளில் 18 பேர் மரணம்

புனித யாத்திரை சென்ற 14 பேர் பலியான சம்பவத்தில் 4 குழந்தைகள் உயிர்தப்பின

கர்­னூல்: ஆந்­திர மாநி­லத்­தில் நேற்று அதி­காலை நிகழ்ந்த விபத்­தில் 14 பேர் உயி­ரி­ழந்­த­னர். நான்கு குழந்­தை­கள் உயிர்­தப்­பின.

ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த 18 பேர் ராஜஸ்­தான் மாநி­லத்­தில் உள்ள அஜ்­மீர் தர்­கா­வுக்­குப் புனி­தப் பய­ணம் மேற்­கொண்டு டெம்போ டிரா­வ­லர் வேனில் புறப்­பட்­ட­னர்.

கர்­னூல் மாவட்­டம் வேல்­துர்தி தாலு­கா­வைச் சேர்ந்த மாத­பு­ரம் கிரா­மம் அருகே உள்ள ஹைத­ரா­பாத்-பெங்­க­ளூரு தேசிய நெடுஞ்­சா­லை­யில் அதி­காலை 4 மணி­ய­ள­வில் வேன் வேக­மா­கச் சென்­று­கொண்டு இருந்­தது.

அப்­போது எதிர்­பா­ரா­த­வி­த­மாக சாலை நடுவே இருந்த தடுப்­பின் மீது மோதி சாலை­யின் மறு­பக்­க­மாக விழுந்து சாய்ந்­தது வேன். அந்த நேரத்­தில் எதிர்த் திசை­யில் இருந்து வந்த லாரி­யின் சக்­க­ரத்­தில் வேன் சிக்கி நொறுங்­கி­யது. மேலும் சில மீட்­டர் தூரத்­துக்கு வேன் இழுத்­துச் செல்­லப்­பட்­டது.

இந்த மோச­மான விபத்­தில் சிக்­கிய வேனுக்­குள் இருந்­த­வர்­களில் 14 பேர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. எட்­டுப் பேர் பெண்­கள், ஐவர் ஆண்­கள், ஒரு குழந்தை ஆகி­யோர் மாண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. இருப்­பி­னும் யாஸ்­மின், அஸ்மா, காஸிம், முஷ்­டாக் என்­னும் நான்கு குழந்­தை­கள் காயங்­க­ளு­டன் உயிர் தப்­பி­ன. அவர்­கள் அனை­வ­ரும் பத்து வய­துக்­குட்­பட்­ட­வர்­கள் என்­றும் அவர்­களில் இரு­வ­ரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­க­வும் போலி­சார் தெரி­வித்­த­னர்.

சாலை­யில் ஓடிக்­கொண்டு இருந்த தமது லாரி முன்­னால் திடீ­ரென வேன் வந்து விழுந்­த­தால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்­டு­நர் உதவி கேட்டு குரல் எழுப்­பி­னார். அத­னைக் கேட்டு கிராம மக்­கள் ஓடி­வந்து வேனுக்­குள் அல­றிக்­கொண்டு இருந்த குழந்­தை­களை மீட்­ட­தா­க­வும் அந்த போலிஸ் அதி­காரி தெரி­வித்­தார். வேன் ஓட்­டு­நர் திடீ­ரென கட்­டுப்­பாட்டை இழந்­த­தற்­கான கார­ணம் சரி­யா­கத் தெரி­ய­வில்லை என்­றார் அவர்.

சம்­ப­வம் பற்றி அறிந்­த­தும் பிர­த­மர் மோடி, ஆந்­திர முதல்­வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகி­யோர் அதிர்ச்­சி­யும் இரங்­க­லும் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே, சனிக்­கி­ழமை அதி­காலை நேரம் பெங்­க­ளூ­ரு­வில் நிகழ்ந்த ஒரு விபத்­தில் நான்கு ஆட­வர்­கள் மாண்­ட­னர். மங்­க­ளூரு-பெங்­க­ளூரு நெடுஞ்­சா­லை­யில் சென்றுகொண்­டி­ருந்த அவர்­க­ளின் கார் திடீ­ரென கட்­டுப்­பாட்டை இழந்து சாலை ஓரம் நிறுத்திவைக்­கப்­பட்­டி­ருந்த 'கன்­டெய்­னர் லாரி' ஒன்­றின் மீது மோதி விபத்­துக்­குள்­ளா­னது. உயி­ரி­ழந்த நால்­வ­ரும் 25க்கும் 30க்கும் இடைப்­பட்ட வய­தி­னர் என்­றும் கணி­னிப் பொறி­யா­ளர்­க­ளாக பணி­யாற்றி வந்­த­வர்­கள் என்­றும் போலி­சார் கூறி­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!