புதிய சட்டங்கள் மோடியின் நண்பர்களுக்கே பலனளிக்கும்: ராகுல்

ஜெய்ப்­பூர்: புதிய 3 வேளாண் சட்­டங்­களை திரும்­பப்­பெற வலி­யு­றுத்தி ராஜஸ்­தான் மாநி­லத்­தில் நடை­பெ­றும் விவ­சா­யி­க­ளின் டிராக்டா் பேர­ணி­யில் பங்­கேற்­ப­தற்­காக அந்த மாநி­லத்­துக்கு ராகுல் காந்தி சனிக்­கி­ழமை சென்றாா்.

பேரணி நடை­பெ­றும் அஜ்­மீ­ரின் ருபங்காா் என்ற இடத்­துக்கு டிராக்­டரை ஓட்­டி­ய­படி ராஜஸ்­தா­னின் பிரத்­யேக தலைப்­பா­கை­யு­டன் ராகுல்­ காந்தி சென்றார். அவ­ர் ஓட்டிய டிராக்­ட­ரின் இரு புறங்­க­ளி­லும் மாநில முதல்வா் அசோக் கெலோட், மாநில காங்­கி­ரஸ் தலைவா் கோவிந்த் சிங் தோட­ஸரா ஆகியோா் அமா்ந்­தி­ருந்­தனா்.

ரூபங்­கா­ரில் பேரணி தொடங்குவதற்கு முன்­பாக விவ­சா­யி­கள் மத்­தி­யில் பேசிய ராகுல், "நாட்­டின் மொத்த மக்­கள்தொகை­யில் 40 விழுக்காட்டினர் வேளாண் தொழி­லில் ஈடு­பட்டு வரு­கின்­றனா். இதில் விவ­சா­யி­கள், சிறு, குறு வா்த்த­கா்­கள், வியா­பா­ரி­கள், தொழி­லா­ளா்­கள் ஆகி­யோ­ரும் அடங்­குவா். இவா்க­ளின் ஒட்­டு­மொத்த தொழி­லை­யும் தனது இரண்டு நண்­பா்­

க­ளி­டம் ஒப்­ப­டைக்க பிர­தமா் மோடி விரும்பு­ கிறாா்.

"புதிய வேளாண் சட்­டங்­கள் கொண்டு வரப்­பட்­ட­தன் நோக்­கம் இது­தான். போரா­டும் விவ­சா­யி­க­ளுக்கு மூன்று தெரி­வு­களை அளித்­தி­ருப்­ப­தாக பிர­தமா் கூறு­கிறாா். பசி, வேலை­யின்மை, தற்­கொலை ஆகி­ய­வை­தான் அந்த தெரி­வு­கள்," என்றாா் ராகுல்.

அவர் பேசிய கூட்­டத்­துக்கு இரண்டு டிராக்­டர் டிரை­லர்­களைக் கொண்டு மேடை அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!