தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து: 45 பேர் பலி

2 mins read
e0004c67-e792-4791-8803-d7a7502f69c5
கால்வாயில் கவிழ்ந்த பேருந்து மீட்கப்பட்டது. படம்: ஊடகம் -

கால்­வாய்­குள் பேருந்து கவிழ்ந்த விபத்­தில் 45 பேர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ள­னர். இந்த துய­ரச் சம்­ப­வம் மத்­தியப் பிர­தே­சத்­தில் நேற்று காலை நிகழ்ந்­துள்­ளது.

அங்­குள்ள சிதி என்ற இடத்­தில் இருந்து சாட்னா என்ற நக­ரத்­துக்கு இயக்­கப்­படும் பேருந்­தில் நேற்று காலை 54 பய­ணி­கள் சென்று கொண்­டி­ருந்­த­னர்.

பாட்னா என்ற கிரா­மத்­துக்கு அருகே பேருந்து திடீ­ரென ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து சாலை­யில் தாறு­மா­றாக ஓடி அருகே உள்ள கால்­வா­யில் கவிழ்ந்­தது.

காலை சுமார் 7.30 மணி­ய­ள­வில் இந்த விபத்து நிகழ்ந்­தது என்­றும் உட­ன­டி­யாக பேருந்­தில் இருந்­த­வர்­க­ளைக் காப்­பாற்ற பலர் முயற்சி மேற்­கொண்­ட­தா­க­வும் விபத்து நிகழ்ந்த பகு­தி­யைச் சேர்ந்த பொது­மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

விபத்து குறித்து தக­வ­ல­றிந்த மீட்­புக்­கு­ழு­வி­னர் விரைந்து வந்து மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.

ஏழு பேர் உயி­ரு­டன் மீட்­கப்­பட்ட நிலை­யில், நேற்று மதி­யம் வரை 40 சட­லங்­களை மீட்­புப் படை­யி­னர் மீட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

விபத்­துப் பகு­திக்கு விரைந்த மூத்த அமைச்­சர்­கள் மீட்­புப்­ப­ணி­க­ளைப் பார்­வை­யிட்டு துரி­தப்­ப­டுத்­தி­னர். இந்த விபத்து கார­ண­மாக நேற்று காலை மாநில அரசு நிகழ்ச்­சி­கள் ரத்­தா­கின.

விபத்­துக்­கான கார­ணம் இது­வரை தெரி­ய­வில்லை. போலி­சார் வழக்கு பதிவு செய்து தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

உயி­ரி­ழந்­தோர் குடும்­பங்­க­ளுக்கு ஐந்து லட்­சம் ரூபாய் இழப்­பீடு வழங்­கப்­படும் என மத்­தி­யப் பிர­தேச முதல்­வர் சிவ­ராஜ் சிங் சௌகான் அறி­வித்­துள்­ளார்.

நடந்த சம்­ப­வம் மிக­வும் துயர­மா­னது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், மீட்­புப் பணி­கள் முழு வீச்­சில் நடை­பெற்று வரு­வ­தாக தெரி­வித்­துள்­ளார்.