முன்னாள் கணவரின் உறவினரை தோளில் சுமந்து செல்லுமாறு துன்புறுத்தப்பட்ட பெண்

மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் உறவினரை தனது தோளில் சுமந்தபடி மூன்று கிலோமீட்டர் நடக்க வற்புறுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வெளியாகி பரவி வருகிறது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குணா என்னும் மாவட்டத்தில் வசித்து வந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்தப் பகுதி மக்களே பேசி தம்பதியரின் சம்மதத்துடன் பிரித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு அந்தப் பெண் தனக்குப் பிடித்த மற்றொரு ஆணுடன், இன்னொரு கிராமத்தில் வாழத் தொடங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், அவரது முன்னாள் கணவரும், கணவரின் உறவினர்களும் வந்து அவரைச் சித்ரவதைக்குள்ளாக்கியதாகவும் முன்னாள் கணவரின் உறவினர் ஒருவரை தோளில் தூக்கியபடி நடந்து செல்லுமாறு மிரட்டியும் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

ஓர் ஆடவரைத் தோளில் சுமந்தபடி அந்தப் பெண்ணை நடக்க வைத்து, அவரது முன்னாள் கணவரின் உறவினர்கள் கைகளில் மட்டையுடன் மிரட்டியபடியும், நடனமாடியபடியும் பின் தொடர்ந்து செல்லும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!