ஜெய்சங்கர்: 25 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்குகிறது

தடுப்பூசி மைத்ரி’ திட்டத்தின் கீழ் பல்வேறு உலக நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்கி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா சூழலில் மோதல்களைத் தடுத்தல் என்ற தலைப்பில் ஐநா பாதுகாப்பு மன்றத்தின் காணொளி மூலம் விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், அண்டை நாடுகள் உட்பட 25 உலக நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், 49 நாடு­க­ளுக்கு தடுப்­பூசி வழங்க இந்­தியா திட்­ட­மிட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

கடி­ன­மான சூழ­லில் பணி­யாற்­றும் ஐநா அமை­திப்­ப­டை­யி­ன­ரைக் கருத்­தில் கொண்டு அவர்­க­ளுக்கு இரண்டு லட்­சம் டோஸ் தடுப்­பூசியை இந்­தியா பரி­சாக வழங்­கும் என்­றும் இதற்­காக இந்தியா மகிழ்ச்சி அடை­வ­தா­க­வும் அமைச்­சர் ஜெய்­சங்­கர் குறிப்­பிட்­டார்.

“பிற­ரது நலன்­க­ளை­யும் மன­தில் வைத்து எப்­போ­தும் பணி செய்­யுங்­கள் என்று பக­வத் கீதை­யில் குறிப்­பி­டப்­பட்டு இருக்­கிறது. இதை மன­தில் வைத்தே கொரோனா கால சவால்­களை இந்தியா எதிர்­கொண்டு வரு­கிறது. அந்­த­வ­கை­யில் உல­க­ள­வில் தடுப்­பூசி தொடர்­பி­லான சவால்­களை எதிர்­கொள்­ளும் வகை­யில் உல­கின் மருந்­த­கம் முன்­னோக்கி அடி­யெ­டுத்து வைக்­கிறது,” என்­றார் அமைச்­சர் ஜெய்­சங்­கர்.

இதற்­கி­டையே கொரோனா நோய்த்­தொற்று மேலாண்மை தொடர்­பான வட்­டார மாநாடு இந்­திய அர­சின் ஏற்­பாட்­டில் நேற்று நடை­பெற்­றது.

பிரே­சில், தென்­னாப்­பி­ரிக்க பயணிகளுக்கு சொந்தச் செலவில் கட்டாய பரிசோதனை

பிரே­சில், தென்­னாப்­பி­ரிக்­கா­வில் கண்­ட­றி­யப்­பட்ட உரு­மா­றிய கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் இந்­தி­யா­வுக்­கும் பரவி உள்­ளது.

இதை­ய­டுத்து அவ்­விரு நாடு­கள் மட்­டு­மல்­லா­மல் பிரிட்­ட­னில் இருந்து இந்­தியா வரும் பய­ணி­கள் அனை­வ­ருக்­கும்­ பு­திய கிரு­மித்­தொற்­றைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­தனை நடத்­தப்­படும் என சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

ஏற்­கெ­னவே இங்­கி­லாந்­தில் கண்­ட­றி­யப்­பட்ட உரு­மா­றிய கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு இந்­தி­யா­வுக்­கும் பரவி உள்­ளது. நாடு முழு­வ­தும் இது­வரை 187 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் இந்த உரு­மாறிய கொரோனா கிரு­மியைவிட பிரே­சில், தென்­னாப்­பி­ரிக்­கா­வில் கண்­ட­றி­யப்­பட்ட புதிய உரு­மா­றிய கொரோனா கிரு­மி­கள் மனி­தர்­க­ளின் நுரை­யீ­ரலை வேக­மா­க­வும் எளி­தா­க­வும் பாதிக்­கும் எனத் தெரிய வந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் மேற்­கு­றிப்­பிட்ட நாடு­களில் இருந்து வரும் பய­ணி­கள் அனை­வ­ரும் இந்­தி­யா­வில் தரை­யி­றங்­கிய கையோடு அவர்­க­ளது சொந்­தச் செல­வில் புதிய வகை கிரு­மித்­தொற்­றுப் பாதிப்­பைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­தனை கட்­டா­ய­மாக்­கப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு அறிவித்துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!