மேற்குவங்க அமைச்சர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்: முதல்வர் மம்தா கடும் கண்டனம்

மேற்குவங்க அமைச்சர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்: முதல்வர் மம்தா கடும் கண்டனம்

1 mins read
b6c6c413-9cdc-441e-b16d-ee2337a2bcd4
ஜாகீர் உசேன். படம்: ஊடகம் -

கோல்கத்தா: மேற்கு வங்க தொழிலாளர் துறை அமைச்சர் ஜாகீர் உசேன் மீது வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார்.

இச்சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜாகீர் உசேனை வேறு கட்சியில் சேருமாறு அவருக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் ஒரு பகுதியாகத்தான் இத்தாக்குதல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்­சர் ஜாகீர் உசேன் முர்ஷிதா­பாத்­தில் இருந்து கோல்­கத்தா நக­ருக்குச் செல்­வ­தற்­காக நிம்­திதா ரயில் நிலை­யத்­திற்குச் சென்ற­போது அடை­யா­ளம் தெரி­யாத சிலர் திடீ­ரென அவர் மீது வெடி­குண்­டு­களை வீசி­னர்.

இதில் அவர் படு­கா­யம் அடைந்­தார். இதை­ய­டுத்து மருத்­துவ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள அவ­ருக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

மத்­திய ரயில்வே அமைச்­சர் பியூஷ் கோயல் உள்­ளிட்ட பலர் இத்­தாக்­கு­த­லைக் கண்­டித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், அமைச்­சர் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லில் பெரிய சதி அடங்­கி­யுள்­ள­தாக முதல்­வர் மம்தா தெரி­வித்­துள்­ளார்.

"ரயில்வே துறை மெத்­த­ன­மா­கச் செயல்­பட்­டுள்­ளது. அமைச்­சர் ஜாகீர் உசேன் மீது முன்­கூட்­டியே திட்­ட­மிட்டு தாக்­கு­தல் நடத்தி உள்­ள­னர்.

"இந்­தத் தாக்­கு­த­லில் அமைச்­ச­ரு­டன் இருந்­த­வர்­கள், பொது­மக்­கள் என 26 பேர் காய­ம­டைந்­த­னர். இது தொடர்­பான வழக்கை மாநில சிஐடி பிரிவு விசா­ரிக்­கும்," என முதல்­வர் மம்தா தெரி­வித்­துள்­ளார்.