மேல் நோக்கி பாயும் ஏவுகணை

மேல் நோக்கி பாயும் ஏவுகணை

1 mins read
edca4a09-4079-43fe-883a-0c34081042be
செங்குத்தாக சென்று இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை.படம்: ஊடகம் -

குறு­கிய தூர இலக்கை செங்­குத்­தாக சென்று தாக்கி அழிக்­கும் புதிய ஏவு­க­ணையை இந்­தியா வெற்­றி­க­ர­மாக பரி­சோ­தித்­துள்­ளது.

நாட்­டின் ராணு­வத் தேவைக்­கான ஆயு­தங்­களை தயா­ரிக்­கும் பணியை பாது­காப்பு ஆராய்ச்சி அமைப்பு மேற்­கொண்­டுள்­ளது. முப்படை­களுக்­கு­மான ஆயு­தங்­களை இந்த அமைப்புதான் தற்போது தயா­ரிக்­கிறது.

இந்­நி­லை­யில் இந்­திய கடற்­ப­டைக்­காக நிலத்­தில் இருந்து வான் நோக்கி குறு­கிய தூர இலக்கை செங்­குத்­தாக சென்று தாக்கி அழிக்­கும் ஏவு­கணை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஏவுகணையை பாதுகாப்பு அமைப்பு நேற்று முன்தினம் இருமுறை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை நடத்தியது.

தற்போது 'சுயசார்பு இந்தியா' என்ற முழக்கத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

இதையடுத்து உள்நாட்டுத் தயாரிப்பில் பாதுகாப்பு அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.

'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த செங்குத்தாகச் சென்று தாக்கும் ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.