50 வயதைக் கடந்தோருக்கு தடுப்பூசி; தனியாரை ஈடுபடுத்த முடிவு

50 வயதைக் கடந்தோருக்கு தடுப்பூசி; தனியாரை ஈடுபடுத்த முடிவு

1 mins read
14efc2c6-ff96-4740-90c1-b6098879162e
மும்பையில் நடைபெற்ற தடுப்பூசி பிரசாரம். தொண்டூழியர்கள் கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் விழிப்புணர்வு பிரசாரத் தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்ற னர். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்­தி­யா­வில் நேற்­றுக் காலை நில­வ­ரப்­படி 11.70 மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டுள்­ளது.

பல மாநி­லங்­களில் புதி­தாக அதிக அள­வில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­வ­தால் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை தீவி­ரப்­ப­டுத்த உள்­துறை அமைச்­சர் அமித் ஷா நேற்று முன்­தி­னம் அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தி­னார்.

நாள் ஒன்­றுக்கு 10,000 முதல் 20,000 பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது. இந்த எண்­ணிக்­கையை 50,000க்கு உயர்த்­த­வும் தடுப்­பூசி போடும் பணி­களில் தனி­யார் துறை­யி­னரை அதிகம் ஈடு­ப­டுத்­த­வும் முடிவு செய்­யப்­பட்டுள்­ளது.

தற்­போது சுகா­தா­ரத் துறை ஊழி­யர்­கள் உள்­ளிட்ட முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்கு தடுப்­பூசி செலுத்­தும் பணி­யில் ஏற்­கெ­னவே தனி­யார் துறை­யி­னர் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள். 10,000 பேருக்கு தடுப்­பூசி போடும் பணி­யில் 2,000 பேர் தனி­யார் துறை­யி­ன­ரால் கவ­னிக்­கப்­ப­டு­வ­தாக அமித் ஷா கூறி­ னார்.

அடுத்த கட்­ட­மாக 50 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு தடுப்­பூசி போடும் பணி­யில் தனி­யார் துறை­யி­ன­ரின் ஒத்­து­ழைப்பு அதி­கம் தேவைப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

நாட்­டின் கால்­வாசிப்பேர், அதா­வது 270 மில்­லி­யன் பேர் 50 வய­தைக் கடந்­த­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­கி­டையே, நேற்­றுக் காலை 8 மணி நில­வ­ரப்­படி இந்­தி­யா­வில் 24 மணி நேரத்­தில் புதி­தாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இத­னால் மொத்த கொரோனா பாதிப்பு 1,10,16,434ஆக அதி­க­ரித்­துள்­ளது. தொற்று பாதிப்­பால் 78 பேர் உயி­ரி­ழந்­த­னர். இதன் மூலம் பலி எண்­ணிக்கை 1,56,463ஆக உயர்ந்­துள்­ளது.