பெங்களூரு: இந்தியப் பெண்களில் 85 விழுக்காட்டினரின் முன்னேற்றமும் பதவி உயர்வு போன்ற வளர்ச்சிக்கான அம்சங்களும் பாலின வேறுபாடு காரணமாக தடுக்கப்
படுவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
லிங்கிட்இன் சமூக ஊடகம் 'வாய்ப்பு குறியீடு 2021' என்னும் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்தியாவில் உள்ள பெண்கள் ஆசிய-பசிபிக் வட்டார நாடுகளில் உள்ள இந்தியப் பெண்களைக் காட்டிலும் பாலின தாக்கத்தால் தங்களது வேலையிடங்களில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் முன்னேற முடியாமல் தவிப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
தங்களது முன்னோரின் காலகட்டத்தைக் காட்டிலும் தற்போது பாலின பாகுபாடு குறைந்திருப்பதாக 66 விழுக்காட்டினர் கருத்துத் தெரிவித்தபோதிலும் இந்தியாவில் வேலை செய்யும் பெண்கள் இன்னும் சிரமங்களையே சந்திக்கின்றனர் என்கிறது ஆய்வு. வேலையிடத்தில் தங்களது நிறுவனங்கள் ஆண்களுக்கே அதிக சலுகை காட்டுவதாக ஐந்தில் ஒரு பெண் ஊழியர் (22%) கூறி இருக்கிறார்.
ஜிஎஃப்கே என்னும் சுயேச்சையான நிறுவனம் மூலம் இவ்வாண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் 10,000 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் 18க்கும் 65க்கும் இடைப்பட்ட வயதினர். இந்தியாவில் கலந்துகொண்டோர் எண்ணிக்கை 2,285. இவர்களில் 1,223 பேர் பெண்கள்.