பெண்களைக் கடவுளாக போற்றும் கிராமம்

தெலுங்­கா­னா­ மாநிலம் சங்­கா­ரெட்டி மாவட்­டத்­தில் உள்ள ஹரி­தாஸ்­பூர் என்­னும் கிரா­மம் பாலின சமத்­து­வத்­துக்கு எடுத்­துக்­காட்­டாக பெண் குழந்­தை­க­ளைக் கொண்­டாடி வரு­கிறது. பெண் குழந்தை பிறந்­த­தும் அங்­குள்ள பஞ்­சா­யத்து அலு­வ­ல­கம் முன் கிரா­மத்­தி­னர் அனை­வ­ரும் ஒன்­று­கூடி இனிப்பு வழங்கி மகிழ்­கின்­ற­னர்.

அந்த அலு­வ­ல­கத்தை வண்ண வண்ண விளக்­கு­ளால் அலங்­க­ரிக்­கின்­ற­னர். குழந்­தை­யின் வீட்­டுக்கு மேள­தா­ளத்­து­டன் சென்று பெற்­றோரை வாழ்த்­து­கின்­ற­னர். பிறந்த பெண் குழந்தை ஒவ்­வொன்­றின் பெயரிலும் வங்­கிக் கணக்­குத் தொடங்­கப்­பட்டு ரூ.1,000 செலுத்­தப்­ப­டு­கிறது. இவ்­வாறு ஊக்­க­ம­ளிப்­ப­தன் விளை­வாக கடந்தாண்டு இவ்வூரில் பிறந்த 14 குழந்­தை­களில் பெண் குழந்­தை­கள் எட்டு. இங்கு புகழ்­பெற்ற சில்­குர் பாலாஜி கோயி­லின் தலைமை அர்ச்­ச­கர் சிஎஸ் ரங்­க­ரா­ஜன் கடந்த வாரம் 'பாலிகா வந்­த­னம்' என்­னும் நிகழ்ச்­சியை நடத்­தி­னார். கட­வு­ளின் அவ­தா­ர­மாக பெண்­களை மதித்­துப் போற்­றும் நிகழ்ச்சி அது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!