மும்பை: பள்ளி மாணவியை திருமணம் செய்துகொண்டால் பாலியல் குற்றத் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என சர்ச்சைக்குரிய வகையில் குற்றவாளிக்கு யோசனை தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிர்ப்பு வலுக்கிறது.
மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர் மோகித் சுபாஷ் சவான் என்பவர் 16 வயது பள்ளி மாணவியை சிறார் வதை செய்ததற்காக போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2012ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்.
தமக்கு பிணை வழங்கக் கோரி சவான் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே, 64, (படம்) விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்டவரிடம், "நீ பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யத் தயாரா?," என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த சவான், "ஏற்கெனவே அந்தப் பெண்ணிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டேன். ஆனால், அவர் சம்மதிக்கவில்லை. தற்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டதால் அவரைத் திருமணம் செய்ய முடியாது," என்றார்.
நீதிபதி அப்போதும், "உன்னால் சீரழிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்வதாக இருந்தால் மட் டுமே உனக்கு உதவி செய்யமுடியும். இல்லையெனில், அரசாங்க வேலையை இழந்து சிறை செல்ல நேரிடும்," என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியின் இச்செயல் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி உள்ளது.
குறிப்பாக பெண்ணுரிமை இயக்கத்தினர், நீதிபதி பதவி விலகக் கோரி ைகயெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். புதன்கிழமை காலை வரை 5,200 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டிருப்பதாக அதனை முன்னின்று நடத்தும் வாணி சுப்பிரமணியம் தெரிவித்தார்.