கௌகாத்தி: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள வடகிழக்கு மாநிலமான அசாமில் காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்தி வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநிலம் முழுவதும் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை, வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் போன்றவை வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார். அசாம் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது.