மும்பை: முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நட
வடிக்கை எடுக்க மும்பை காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங் உத்தரவிட்டுள்ளார். மாநகரின் ஒவ்வொரு மண்டலத்திலும் முகக்கவசம் அணிய மறுக்கும் 1,000 பேரையாவது தினமும் பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் ரூ.200 அபராதம் வசூலிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மும்பையில் 12 காவல்துறை மண்டலங்கள் உள்ளன.

