'கொவிட்-19' ஒழிப்பில் இறுதிக்கட்டத்தில் இந்தியா

'கொவிட்-19' ஒழிப்பில் இறுதிக்கட்டத்தில் இந்தியா

2 mins read
fad4931d-94ee-4829-8923-eb14affc8f97
சுகாதார அமைச்சர்ஹர்ஷ் வர்தன். படம்: ஊடகம் -

ஹர்ஷ் வர்தன்: தினமும் 1.5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் தின­மும் 1.5 மில்­லி­யன் பேருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­ப­டு­வ­தாக மத்­திய சுகா­தார அமைச்­சர் ஹர்ஷ் வர்­தன் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் நடை­பெற்ற மருத்­துவ மாநாடு ஒன்­றில் கலந்து­கொண்டு பேசிய அவர், இந்­தியா கொரோனா கிரு­மித்­தொற்று ஒழிப்பு நட­வ­டிக்­கை­யின் இறு­திக்­கட்­டத்­தில் உள்­ள­தாக குறிப்­பிட்­டார்.

கொரோனா கிரு­மியை வெல்ல வேண்­டும் என்­றால் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என அவர் அறி­வு­றுத்­தி­னார்.

"அன்­றா­டம் தடுப்­பூசி போட்­டுக் கொள்­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. நாடு முழு­வ­தும் இது­வரை 20 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன.

"பிற நாடு­க­ளைப் போல அல்­லா­மல் இந்­தி­யா­வில் கொரோனா தடுப்­பூசி உற்­பத்தி சீராக உள்­ளது. மேலும் இந்­தத் தடுப்­பூ­சி­கள் பாது­காப்பு மிக்­க­தா­க­வும் எதிர்ப்பு சக்­தியை உறு­திப்­ப­டுத்­து­வ­தா­க­வும் உள்­ளன," என்­றார் ஹர்ஷ் வர்­தன்.

பிர­த­மர் மோடி­யின் தலை­மை­யின் கீழ், உலக நாடு­க­ளின் மருந்­த­க­மாக இந்­தியா உரு­வெடுத்து வரு­வ­தாக குறிப்­பிட்ட அவர், இது­வரை இந்­தி­யா­வில் இருந்து 62 நாடு­க­ளுக்கு 55 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறினார்.

"உலகின் ஏழை நாடுகளில் கொரோனா கிருமித்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தடுப்பூசி போடுவதால் மட்டும் இந்தியா பாதுகாப்பாக இருக்க முடியாது. எனவேதான் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது.

"கொரோனா கிரு­மித்­தொற்று ஒழிப்­பின் இறு­திக்­கட்­டத்­தில் உள்­ளோம். இதில் வெற்றி பெற வேண்­டு­மா­னால் மூன்று நடை­மு­றை­க­ளைப் பின்­பற்ற வேண்­டும்.

"தடுப்­பூசி திட்­டத்தை அர­சி­ய­லாக்­கக் கூடாது, இரண்­டா­வ­தாக தடுப்பு மருந்­தின் பின்­னால் உள்ள அறி­வி­யலை நம்­பு­வது, நம்­மைச் சுற்றி உள்­ள­வர்­கள் உரிய நேரத்­தில் தடுப்­பூசி போட்­டுக் கொள்­வதை உறுதி செய்­வது ஆகி­யவை மிக முக்­கி­யம்," என்­றார் அமைச்­சர் ஹர்ஷ் வர்­தன்.