புதுடெல்லி: தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ''மின்னணு வாக்குப்
பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட வதந்தி தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புகள் இல்லை. அந்த இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தகவல் பரப்புவோர் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரிக்கப்பட்டுள்ளது.

