அம்பானி வீட்டருகே மர்ம கார்: காவல்துறை அதிகாரி கைது

மும்பை: பெரும் தொழி­ல­தி­பர் ‘ரிலை­யன்ஸ்’ முகேஷ் அம்­பா­னி­யின் வீட்­டிற்­க­ருகே கடந்த மாதம் வெடி­பொ­ருள்­க­ளு­டன் நின்றிருந்த மர்ம கார் தொடர்­பான வழக்­கில், காவல்­துறை உதவி ஆய்­வா­ளர் சச்­சின் வாசேவை தேசிய புல­னாய்­வுப் பிரிவு கைது செய்­த­து.

மும்­பை­யில் உள்ள புல­னாய்­வுப் பிரிவு தலை­மை­ய­கத்­தில் நேற்று முன்­தி­னம் வாசே­வி­டம் அதி­கா­ரி­கள் 12 மணி நேரம் விசா­ரணை நடத்­தினர். அதன்­பின் அவர் கைது செய்­யப்­பட்­டார். வரும் 25ஆம் தேதி வரை அவ­ரைப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் காவ­லில் வைத்து விசா­ரிக்க நீதி­மன்­றம் நேற்று உத்தரவிட்டது.

அந்த காரின் உரி­மை­யா­ள­ரான மன்­சுக் ஹிரேன் கொலை செய்­யப்­பட்­டதை புல­னாய்­வுப் பிரிவு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதன் தொடர்­பில் மகா­ராஷ்­டிரா பயங்­க­ர­வா­தத் தடுப்பு போலி­சா­ரும் வாசே­வி­டம் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

மன்­சுக்­கின் காரை வாசே நான்கு மாத­கா­ல­மா­கக் கட­னா­கப் பெற்­றி­ருந்­த­தா­க­வும் கடந்த மாதம் 5ஆம் தேதி­தான் அதைத் திருப்­பித் தந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!