தேசிய புலனாய்வு முகவை ஏழு இடங்களில் அதிரடி சோதனை

தேசிய புலனாய்வு முகவை ஏழு இடங்களில் அதிரடி சோதனை

2 mins read

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விசாரணை; ஐந்து பேர் கைது

புது­டெல்லி: தேசிய புல­னாய்வு முகவை (என்­ஐஏ) நேற்று மூன்று மாநி­லங்­களில் அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­டது. ஐஎஸ்­ஐ­எஸ் தீவி­ர­வாத அமைப்பு­டன் தொடர்­புள்ள இடங்­களில் அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­தாக இந்­திய ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

டெல்லி, கர்­நா­டகா, கேரளா ஆகிய மூன்று மாநி­லங்­களில் மொத்­தம் ஏழு இடங்­களில் இந்­தச் சோதனை நடை­பெற்­றது.

ஐஎஸ்­ஐ­எஸ் தீவி­ர­வாத அமைப்­புக்கு உத­வும் சில­ரும் அவர்­கள் சார்ந்த சில அமைப்­பு­களும் தேசிய புல­னாய்வு முக­மை­யின் சந்­தேக வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது. இதை­ய­டுத்து ஒரே சம­யத்­தில் மூன்று மாநி­லங்­களை குறி­வைத்து சோதனை நடத்­தப்­பட்­டது.

டெல்­லி­யில் ஜஃப்ரா­பாத் பகு­தி­யி­லும் கர்­நா­ட­கா­வில் பெங்­க­ளூரு நக­ரில் உள்ள இரண்டு இடங்­க­ளி­லும் புல­னாய்வு முகவை அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்டு பல ஆவ­ணங்­க­ளைக் கைப்­பற்­றி­ய­தா­கத் தெரி­கிறது.

இதே­போல், கேர­ளா­வின் கொச்சி, குனூர், மலப்­பு­ரம் பகு­தி­களில் உள்ள நான்கு இடங்­களில் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது. சட்ட விரோத செயல்­பா­டு­க­ளு­டன் தொடர்­பு­டைய அமைப்­பு­கள், அவற்­று­டன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது விரை­வில் நட­வ­டிக்கை பாயும் எனக் கூறப்­ப­டு­கிறது.

சோதனை நட­வ­டிக்­கையை அடுத்து, சில­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது. அதே­ச­ம­யம் தலை­ம­றை­வாக உள்ள சில­ருக்கு வலை­வீ­சப்­பட்­டுள்­ளது.

நேற்று நடந்த சோத­னைக்­குப் பிறகு ஐந்து பேர் கைதா­கி­யுள்­ள­னர் என்­றும் மேலும் ஏழு பேரி­டம் விசா­ரணை நடந்து வரு­வ­தா­க­வும் கேரள ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

மலப்­பு­ரம் பகு­தி­யில் அர­சி­யல் கட்­சிப் பிர­மு­கர் ஒரு­வ­ரது வீட்­டில் சோதனை நடத்­தப்­பட்­ட­போது, பாது­காப்­புக்­காக அதி­ர­டிப்­படை வீரர்­கள் கூடு­த­லாக வர­வ­ழைக்­கப்­பட்­ட­தாக அந்த ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

சோதனை நட­வ­டிக்கை முடிவுக்கு வந்த பிறகே கூடு­தல் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­படும் என தேசிய புல­னாய்வு முகவை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன.

"மொத்­தம் ஏழு இடங்­களில் விரி­வான சோதனை நடை­பெ­று­கிறது. ஏற்­கெ­னவே கிடைத்த ரக­சிய தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

"சோத­னை­யி­டப்­படும் இடங்­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளி­டம் முதற்­கட்ட விசா­ரணை நடை­பெ­றும். அதன் பிறகு அவர்­கள் கைது செய்­யப்­பட வாய்ப்­புண்டு. சில அமைப்­பு­கள் எந்த வகை­யில் முறை­கே­டா­க­வும் தீவி­ர­வாத செயல்­க­ளுக்கு உத­வி­க­ர­மா­க­வும் இருந்­தன என்­பது குறித்து பின்­னர் தெரி­விக்­கப்­படும்," என புல­னாய்வு முகவை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த இரு தினங்­க­ளுக்கு முன்பு தேசிய புல­னாய்வு முகவை ஐஎஸ்­ஐ­எஸ் அமைப்பு தொடர்­பாக புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்­துள்­ள­தா­க­வும் அதன் அடிப்­ப­டை­யி­லேயே நேற்று சோதனை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும் தெரி­கிறது.