பாதுகாப்பு அதிகாரியை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டதாக மம்தா பானர்ஜி புகார்

பாதுகாப்பு அதிகாரியை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டதாக மம்தா பானர்ஜி புகார்

2 mins read
7b89c08d-625a-4326-bd01-2777cfb28de8
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரசாரம் செய்துவரும் மம்தா பானர்ஜி. படம்: ஊடகம் -

கோல்­கத்தா: மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி மீது தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது தாக்­கு­தல் நடந்­த­தா­கப் புகார் எழுந்­துள்ள நிலை­யில், அவர் போட்­டி­யி­டும் நந்தி கிராம் தொகு­தி­யின் பாது­காப்பு அதி­காரி இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

தேர்­தல் ஆணை­யம் இந்த அதி­ரடி நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளது.

கடந்த 10ஆம் தேதி முதல்­வர் மம்தா பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டி­ருந்­தார். அப்­போது அடை­யா­ளம் தெரி­யாத சிலர் திடீ­ரென தாக்­கி­ய­தா­க­வும் அத­னால் தமது காலில் காயம் ஏற்­பட்­ட­தா­க­வும் முதல்­வர் மம்தா தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும், அவரை யாரும் தாக்­க­வில்லை என்­றும் அவர் எதிர்­கொண்­டது ஒரு விபத்­து­தான் என்­றும் தேர்­தல் பார்­வை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், நந்தி கிராம் தொகு­தி­யில் பாது­காப்பு அதிகா­ரியை பணி இடை­நீக்­கம் செய்­துள்­ளது தேர்­தல் ஆணை­யம்.

மேலும் அவர் மீது சட்­டப்­படி வழக்­குப்­ப­திவு செய்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என­வும் தேர்­தல் ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

முன்­ன­தாக நந்­தி­கி­ராம் தொகுதி அடங்­கி­யி­ருக்­கும் புர்பா மேதி­னி­பூர் மாவட்ட ஆட்­சி­யர் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார். மேலும், காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ள­ரும் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே மேற்கு வங்க சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் பாஜக இரு­நூ­றுக்கு மேற்­பட்ட தொகு­தி­களில் வெற்­றி­பெ­றும் என உள்­துறை அமைச்­சர் அமித் ஷா நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

காரக்­பூ­ரில் நடை­பெற்ற பிர­சார நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற அவர், மேற்கு வங்க மக்­கள் ஒரு மாற்­றத்தை விரும்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில் மூத்த அர­சி­யல் தலை­வ­ரும் முன்­னாள் மத்­திய அமைச்­ச­ரு­மான யஷ்­வந்த் சின்ஹா திடீ­ரென திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் இணைந்­துள்­ளார். அவர் கட்­சி­யின் துணைத் தலை­வ­ராக நிய­மித்துள்ளதாக முதல்­வர் மம்தா பானர்ஜி அறி­வித்­துள்­ளார்.