சமூக வலைத்தள நிறுவன ஊழியர்களை மிரட்டவில்லை: மத்திய அரசு விளக்கம்

சமூக வலைத்தள நிறுவன ஊழியர்களை மிரட்டவில்லை: மத்திய அரசு விளக்கம்

1 mins read

புது­டெல்லி: சமூக வலைத்­தள நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­கள் மிரட்­டப்­ப­ட­வில்லை என மத்­திய அரசு திட்டவட்டமாகத் தெரி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக இந்த ஊழி­யர்­க­ளுக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும் என மிரட்­டல் விடுக்­கப்­பட்­ட­தாக ஒரு தக­வல் பர­வி­யது.

இது­கு­றித்து அறிக்கை வெளி­யிட்­டுள்ள மத்­திய தக­வல் தொழில்­நுட்­பத்­துறை அமைச்­சர், நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்­த­படி, சமூக ஊட­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­ப­வர்­கள் அர­சை­யும் பிர­த­ம­ரை­யும் அல்­லது எந்­த­வொரு அமைச்­ச­ரை­யும் விமர்­சிக்க முடி­யும் என அதில் குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும், விமர்­ச­னங்­க­ளை­யும் எதிர்ப்­பு­க­ளை­யும் மத்­திய அரசு வர­வேற்­ப­தா­க­வும் அந்த அறிக்கை தெரி­விக்­கிறது.

அதே­வே­ளை­யில், வன்­முறையை ஊக்­கு­வித்­தல், பர­வ­லான வகுப்­பு­வாத பிளவு, பயங்­க­ர­வா­தத்தை தூண்­டு­வது போன்­றவை கட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என­வும் மத்­திய அரசு வலி­யு­றுத்தி உள்­ளது.

"எழுத்­து­பூர்­வ­மாக அல்­லது வாய்­மொ­ழி­யாக மத்­திய அர­சின் எந்­த­வொரு அறி­விப்­பும் சமூக வலைத்­தள நிர்­வா­கி­களை சிறைத்­தண்­ட­னையைச் சுட்­டிக்­காட்டி அச்சு­றுத்­த­வில்லை.

"எனி­னும் இந்­தி­யா­வின் பிற வணி­கங்­கள் போலவே நாட்­டின் சட்­டங்­க­ளை­யும் இந்­திய அர­சி­ய­ல­மைப்­பை­யும் பின்­பற்ற வேண்­டிய கட்­டா­யம் சமூக வலைத்­த­ளங்­க­ளுக்­கும் உண்டு," என மத்­திய தக­வல் தொழில்­நுட்­பத்­துறை வெளி­யிட்ட அறிக்­கை­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.