வேட்பாளர் தேர்வு: மேற்குவங்க பாஜகவினர் கடும் எதிர்ப்பு

வேட்பாளர் தேர்வு: மேற்குவங்க பாஜகவினர் கடும் எதிர்ப்பு

2 mins read
57af8117-abf2-41d4-92b3-ecad02ebbac1
திங்கட்கிழமை அன்று கட்சி அலுவலகம், தேர்தல் அலுவலகத்துக்கு வருகை தந்த மாநில பாஜகவின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் வாகனங்களை தொண்டர்கள் முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பதற்றம் நிலவியது.படம்: ஊடகம் -

தேர்தல் அலுவலகம் முற்றுகை; கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன

கோல்­கத்தா: மேற்கு வங்க சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர் பட்­டி­யலை பாஜக தலைமை வெளி­யிட்ட நிலை­யில் பாஜக தொண்­டர்­களும் நிர்­வாகி­களும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

வேட்­பா­ளர் தேர்வு மிக மோச­மாக உள்­ளது என கருத்து தெரி­வித்­துள்ள அதி­ருப்­தி­யா­ளர்­கள் திங்­கட்­கி­ழமை கோல்­கத்­தா­வில் உள்ள பாஜக தேர்­தல் அலு­வ­ல­கத்­துக்கு வெளியே போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

பாஜ­க­வின் வளர்ச்­சிக்­காக பாடு­பட்­ட­வர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கா­மல் ஆளும் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்து அண்­மை­யில் பாஜ­க­வில் இணைந்த பலர் தேர்­த­லில் கள­மி­றக்­கப்­பட்­டதே தொண்­டர்­க­ளின் கோபத்­துக்கு கார­ணம் எனக் கூறப்­ப­டு­கிறது.

திங்­கட்­கி­ழமை கோல்­கத்­தா­வில் நடந்த போராட்­டத்­தின்­போது பாஜ­க­வின் மூத்த தலை­வர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் கண்­டன முழக்­கங்­கள் எழுப்­பப்­பட்­டன.

பாஜக தேர்­தல் அலு­வ­ல­கத்­துக்கு வெளியே திரண்­டி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கான தொண்­டர்­கள் போலி­சார் அமைத்­தி­ருந்த தடுப்­ப­ரண்­களை மீறி அலு­வ­ல­கத்­துக்­குள் நுழைய முற்­பட்­ட­னர்.

மேலும் வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் உள்ள சில­ரது பெயர்­க­ளைக் குறிப்­பிட்டு கடு­மை­யாக விமர்­சித்­த­னர்.

கோல்­கத்­தா­வைத் தவிர மற்ற மாவட்­டங்­களில் உள்ள பாஜக அலு­வ­ல­கங்­களும் அக்­கட்­சி­யி­ன­ரால் சூறை­யா­டப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

சில இடங்­களில் பாஜக அலு­வ­ல­கம், தேர்­தல் பணி­ம­னை­க­ளுக்கு எதிர்ப்­பா­ளர்­கள் பூட்டு போட்­ட­னர்.

தொண்­டர்­க­ளின் உணர்­வு­களைப் புரிந்­து­கொள்ள முடி­கிறது என்­றும் நடந்த சம்­ப­வங்­கள் துரதிர்ஷ்­ட­வ­ச­மா­னவை என்றும் பாஜக செய்தி தொடர்­பா­ளர் சமிக் பட்­டாச்­சார்யா தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும் இது தற்­கா­லி­க­மான பின்­ன­டை­வு­தான் என்­றும் விரை­வில் இயல்­பு­நிலை திரும்­பும் என்­றும் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா திங்­கட்­கி­ழமை கோல்­கத்­தா­வில்­தான் இருந்­தார். அக்கட்­சி­யின் தேசிய தலை­வ­ரான ஜே.பி.நட்­டா­வும் மேற்கு வங்­கத்­தில் ஒரு நாள் பிர­சா­ரம் மேற்­கொள்ள திங்­கட்­கி­ழமை மாலை கோல்­கத்தா வந்­த­டைந்­தார்.

கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­கள் வந்­தி­ருப்­ப­தை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் பாஜ­க­வி­னர் நடத்­திய போராட்­டம் அக்­கட்­சித் தலை­மையை யோசிக்க வைத்­தி­ருக்­கும் என அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.