மம்தா: குரலும் இதயமும் உள்ளவரை போராடுவேன்

மம்தா: குரலும் இதயமும் உள்ளவரை போராடுவேன்

1 mins read
a3388265-bd43-44fa-a5be-444271c4dd39
முதல்வர் மம்தா. படம்: ஊடகம் -

கோல்­கத்தா: தனது குர­லும் இத­ய­மும் செயல்­ப­டும்­வரை தாம் பாஜ­க­வுக்கு எதி­ராக தொடர்ந்து போரா­டப் போவ­தாக மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி தெரி­வித்­துள்­ளார்.

புரு­லியா மாவட்­டம் ஜால்­டா­வில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற தேர்­தல் பிர­சார கூட்­டத்­தில் பேசிய அவர், சதி­க­ளால் தம்மை தடுத்து நிறுத்த முடி­யாது என்று ஆவே­சத்­து­டன் குறிப்­பிட்­டார்.

"சட்­டப்­பே­ரவை தேர்­த­லுக்கு பாஜக அதன் தலை­வர்­க­ளு­டன் டெல்­லி­யில் இருந்து வந்­துள்­ளது. ஆனால் வங்­கா­ளம் அவர்­க­ளுக்கு கிடைக்­காது.

"சில நாள்­கள் பொறுத்­தி­ருங்­கள், எனது கால்­கள் குண­மா­கி­வி­டும். அதன்­பி­றகு உங்­கள் கால்­கள் வங்­காள மண்­ணில் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­கி­றதா என்று பார்க்­கி­றேன்," என்று எச்­ச­ரிக்கை விடுக்­கும் தொனி­யில் பேசி­னார் முதல்­வர் மம்தா.

எனி­னும் யாருக்கு இந்த எச்­ச­ரிக்கை என்­பதை அவர் சுட்­டிக்­காட்­ட­வில்லை.

மேற்கு வங்­கா­ளத்­தில் கடந்த பத்­தாண்­டு­களில் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் ஏரா­ள­மான நலத்­திட்­டப் பணி­கள் நடந்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், தமது அரசு செயல்­ப­டுத்­திய மேம்­பாட்டு திட்­டங்­கள்­போன்று உல­கில் வேறு எந்த அர­சும் செயல்­ப­டுத்­தி­ய­தில்லை என்­றார்.

பாஜகவின் பிரதமரால் நாட்டை வழிநடத்த முடியவில்லை என்றும் பிரதமர் முற்றிலும் திறமையற்றவர் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

கடந்த 10ஆம் தேதியன்று மம்தா தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு நிகழ்ந்த சம்பவத்தில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு பாஜகவின் சதியே காரணம் என அவர் சாடி இருந்தார்.

இந்நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் அவர் தமது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.