லாபம் தனியார் மயம்; நஷ்டம் அரசுடமை: ராகுல் புகார்

லாபம் தனியார் மயம்; நஷ்டம் அரசுடமை: ராகுல் புகார்

1 mins read
598073bd-2c04-4989-88fe-340d95cf2ff3
காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி. படம்: இணையம் -

புது­டெல்லி: வேலை­நி­றுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள வங்கி ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ர­வாக தாம் துணை நிற்­ப­தாக காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், மத்­திய அரசு லாபத்தை தனி­யார்­ம­ய­மாக்­கு­கிறது என்­றும் நஷ்­டத்தை மட்­டும் அர­சு­டை­மை­யாக்­கு­வ­தா­க­வும் விமர்­சித்­துள்­ளார்.

"பொதுத்­துறை வங்­கி­கள் பிர­த­மர் மோடி­யின் நண்­பர்­க­ளுக்கு விற்­கப்­ப­டு­கின்­றன. இதன் மூலம் இந்­தி­யா­வின் நிதி பாது­காப்­புக்கு பாதிப்பு ஏற்­ப­டு­கிறது. ஆனால் இவ்­வி­ஷ­யத்­தில் கடு­மை­யாக சம­ர­சம் செய்­யப்­ப­டு­கிறது," என்று ராகுல் தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே வங்கி ஊழி­யர்­க­ளின் வேலை­நி­றுத்­தப் போராட்­டம் நேற்று இரண்­டா­வது நாளாக நீடித்­தது.

இதில் மேலா­ளர்­கள், அதி­கா­ரி­கள் என சுமார் பத்து லட்­சம் பணி­யா­ளர்­கள் பங்­கேற்­ற­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. வங்­கிப் பணி­கள் முற்­றி­லு­மாக முடங்­கி­ய­தால் பொது­மக்­கள், வர்த்­த­கர்­கள் என பல்­வேறு தரப்­பி­ன­ரும் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­ட­னர்.