மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி (படம்) சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்தார்.
திலீப் காந்தி, 69, மகாராஷ்டிரா மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராவார்.
1999ஆம் ஆண்டு அகமத் நகர் மக்களவை தொகுதி உறுப்பினராக வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து, கடந்த 2003 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கப்பல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2009, 2014 ஆம் ஆண்டுகளின் மக்களவைத் தேர்தல்
களிலும் வெற்றிபெற்றார் இவர். வயது முதிர்வு காரணமாக 2019 மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கி இருந்த திலீப் காந்திக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிவித்தது.

