புதுடெல்லி: நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 146 டன் கொரோனா மருத்துவக் கழிவுகள் உருவாவதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, "நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை, நோயாளிகளை தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் தினமும் 146 டன் மருத்துவக் கழிவுகள் சேருகின்றன.
"இவை அனைத்தும் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகின்றன. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலகட்டமான கடந்த ஆண்டு இதைவிட அதிகமாக நாள் ஒன்றுக்கு சுமார் 616 டன் கழிவுகள் உருவாயின," என்று தெரி வித்தார்.
மேலும், மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதை உறுதிசெய்வதற்காக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை வகுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

