22 நகரங்களில் அசுத்த காற்று

22 நகரங்களில் அசுத்த காற்று

1 mins read

புது­டெல்லி: சுவிட்­சர்­லாந்­தைச் சேர்ந்த ஐ.கியூ.ஏர் என்ற நிறு­வ­னம் உலக காற்­றுத்­தர அறிக்கை 2020 என்ற ஆய்­வ­றிக்­கையை அண்­மை­யில் வெளி­யிட்­டது. அதில், உல­கின் ஆக மோச­மாக மாச­டைந்த நக­ரங்­கள் பட்­டி­ய­லில் தொடர்ந்து இந்­தியா முக்­கிய இடம்பிடித்­தி­ருப்­ப­தும் உல­கி­லேயே அதிக மாச­டைந்த 30 நக­ரங்­களில் 22 நக­ரங்­கள் இந்­தி­யா­வில் இருப்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளன. சீனா­வின் சிங் கியான் நக­ரத்­திற்­குப் பிறகு 9 இடங்­களில் உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் காசி­யா­பாத், குலஞ்­சர், பெஸ்­ரப், ஜலால்­பூர், நொய்டா, கிரேட்­டர் நொய்டா, கான்­பூர், லக்னோ ஆகிய நக­ரங்­கள், ராஜஸ்­தான் மாநி­லத்­தின் திவாரி, தலை­ந­கர் டெல்லி ஆகி­யவை உள்ளன.