புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா (படம்) நேற்றுக் காலை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தனது தொலைபேசி அழைப்பை எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா ஏற்காததால் சந்தேகமடைந்த அவரது தனிப்பட்ட உதவியாளர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். சர்மாவின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என போலிசார் விசாரித்து வருகின்றனர். இவ ரது மரணத்தைத் தொடர்ந்து பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
பாஜக எம்.பி. மர்ம மரணம்
1 mins read

