மூன்று கோடி ரேஷன் அட்டைகள் ரத்து
புதுடெல்லி: ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை எனக் கூறி, ஏழைகள், பழங்குடியினர் உள்ளிட்ட மூன்று கோடி குடும்பங்களின் ரேஷன் அட்டையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மிகக் கடுமையான விவகாரம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், சிம்தேகா மாவட்டத்தைச் சேர்ந்த கோய்லி தேவி எனும் பெண், தம்முடைய 11 வயது மகள் சந்தோஷி பட்டினியால் 2018 செப்டம்பர் 28ஆம் தேதி இறந்துபோனதாகக் கூறி, பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். ஆதார் அட்டையை இணைக்காததால் நான்கு கோடி ரேஷன் அட்டைகள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பட்டினியால் எவரும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

