விளக்கமளிக்க உத்தரவு

விளக்கமளிக்க உத்தரவு

1 mins read

மூன்று கோடி ரேஷன் அட்டைகள் ரத்து

புது­டெல்லி: ஆதார் அட்­டை­யு­டன் இணைக்­கப்­ப­ட­வில்லை எனக் கூறி, ஏழை­கள், பழங்­கு­டி­யி­னர் உள்­ளிட்ட மூன்று கோடி குடும்­பங்­க­ளின் ரேஷன் அட்­டையை மத்­திய அரசு ரத்து செய்­தி­ருப்­பது மிகக் கடு­மை­யான விவ­கா­ரம் என்று உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

ஜார்க்­கண்ட் மாநி­லம், சிம்­தேகா மாவட்­டத்­தைச் சேர்ந்த கோய்லி தேவி எனும் பெண், தம்­மு­டைய 11 வயது மகள் சந்­தோஷி பட்­டி­னி­யால் 2018 செப்­டம்­பர் 28ஆம் தேதி இறந்­து­போ­ன­தா­கக் கூறி, பொது­நல வழக்கு தொடுத்­தி­ருந்­தார். ஆதார் அட்­டையை இணைக்­கா­த­தால் நான்கு கோடி ரேஷன் அட்­டை­கள் வரை ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் தமது மனு­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஆனால், பட்­டி­னி­யால் எவ­ரும் உயி­ரி­ழக்­க­வில்லை என மத்­திய அரசு கூறி வரு­கிறது.

இந்­நி­லை­யில், இந்த விவ­கா­ரத்­தில் மத்­திய, மாநி­ல அரசுகள் விளக்­க­ம­ளிக்குமாறு உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.