கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம், ஜகத்தல் நகரின் 15 இடங்களில் நேற்று முன்தினம் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அடையாளம் தெரியாத சிலர் அக்குண்டுகளை வீசியதாகவும் பல்வேறு இடங்களில் கண்காணிப்புப் படச்சாதனங்களைச் சேதப்படுத்தியதாகவும் போலிசார் கூறினர்.
போலிஸ் முன்பாகவே ஒரு வெடிகுண்டு வீச்சு சம்பவம் இடம்பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையத்தை அணுகப்போவதாக மேற்கு வங்க பாஜக தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளார்.

