வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது குறித்து பரிசீலனை

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது குறித்து பரிசீலனை

1 mins read

புது­டெல்லி: வாக்­கா­ளர் அட்­டை­யுடன் ஆதார் அட்­டையை இணைப்­பது தொடர்பான தேர்­தல் ஆணை­யத்­தின் பரிந்­துரை குறித்து இந்­திய அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது.

"ஒரே ஆள் வெவ்­வேறு இடங்­களில் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இடம்­பெ­று­வ­தைத் தடுக்­கும் வித­மாக வாக்­கா­ளர் அட்­டையை ஆதார் அட்­டை­யு­டன் இணைக்க தேர்­தல் ஆணை­யம் பரிந்­து­ரைத்­துள்­ளது. அதைச் செய்­வ­தற்­குத் தேர்­தல் சட்­டங்­களில் திருத்­தம் மேற்­கொள்ள வேண்­டும். அது குறித்து அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது," என்று மத்­திய சட்ட அமைச்­சர் ரவி சங்­கர் பிர­சாத் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

அத்­து­டன், வாக்­கா­ளர் அட்­டை­யு­டன் ஆதார் அட்­டையை இணைப்­பது தொடர்­பில் உச்ச நீதி­மன்­றத்­தி­டம் இருந்து அர­சாங்­கத்­திற்கு எந்த அறி­வு­றுத்­த­லும் வர­வில்லை என்­றும் அவர் சொன்­னார்.