439 பள்ளிகளில் பயிலும் 2.75 லட்சம் மாணவர்களுக்கு பரிசோதனை ெசய்ய உத்தரவு தஞ்சையில் கிருமித்தொற்றால் 100 மாணவர்கள் பாதிப்பு

439 பள்ளிகளில் பயிலும் 2.75 லட்சம் மாணவர்களுக்கு பரிசோதனை ெசய்ய உத்தரவு தஞ்சையில் கிருமித்தொற்றால் 100 மாணவர்கள் பாதிப்பு

2 mins read
65c98cc2-0265-4da8-b6c8-715c1c552194
-

தஞ்­சா­வூர்: கொரோனா கிரு­மிப் பர­வ­லின் இரண்­டாம் அலை தமி­ழக மக்­களை மீண்­டும் அலைக்­க­ழிக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

இந்த அலையின் தாக்கத்துக்கு தஞ்­சை­ மாவட்டத்தில் கல்வி பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டி ருப்பது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாவட்­டத்­திற்கு உட்­பட்ட 439 பள்­ளி­களில் படித்து வரும் 2.75 லட்­சம் மாண­வர்­க­ளுக்கு கொரோனா பரி­சோ­தனை செய்யவிருப்பதாக இம் மாவட்ட ஆட்­சி­யர் கோவிந்­த­ராவ் தெரிவித்துள்ளார்.

தஞ்­சை­யில் ஏற்­கெ­னவே ஏழு பள்­ளி­களில் பயி­லும் 68 மாணாக்­கர்­க­ள் இத்­தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது உறு­தி­யானது.

இதைத்­தொ­டர்ந்து, இரு தனி­யார் பள்­ளி­களில் பயி­லும் 27 மாண­வர்­களும் இத்தொற்­றால் பாதிக்கப்­பட்­டி­ருப்­பது நேற்று தெரியவந்தது.

சாஸ்த்ரா பல்கலைக்­க­ழக மாண­வர்­கள் இரு­வ­ரும் இப்பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்­து­டன், எட்டு ஆசி­ரி­யர்­கள், ஒன்­பது பெற்­றோர்­க­ளுக்கும் இந்த பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் கடந்த பிப்­ர­வரி மாதத்­தில் 500க்கும் கீழ் படிப்­படி யாகக் குறைந்து வந்த இந்தக் கிருமிப் பாதிப்பு, இப்­போது மீண்­டும் ஆயி­ரம் பேரை நெருங்­கும் வகை­யில் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், தஞ்சை மாவட்­டத்­தில் நூற்றுக்கும் மேலான மாணவர்கள் கிருமிப் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதால், 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரை படித்து வரும் 275,185 மாண­வர்­க­ளுக்கு கொரோனா பரி­சோ­தனை செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்­சா­வூர் மாவட்­டம் அம்­மாப்­பேட்டை அரசுப் பள்­ளி­யில் படிக்கும் மாண­வர்­க­ளுக்கு கிருமிப் பரவல் உறு­தி­யா­னதைத் தொடர்ந்து ஆலத்­தூர் பள்ளி, மேக்ஸ்­வெல் பள்ளி, கிறிஸ்­துவ பெண்­கள் பள்ளி, கும்­ப­கோ­ணம் சரஸ்­வதி பாட­சாலையில் படிக்­கும் மாண­வர்­க­ளும் கிருமிப் பாதிப்புக்கு அதிகம் ஆளாகினர்.

இதனால், இந்த ஐந்து பள்­ளி­க­ளுக்கும் இரு வாரங்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை விடு­முறை அறி­வித்துள்­ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 439 பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 275,185 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். 14 குழுவினர் கிருமி முறியடிப்பில் அணுக்கமாக ஈடுபடுத்தப்படுவர்.

தஞ்சை மாவட்ட ஆட்­சி­யர் கோவிந்­த­ராவ்